Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 26 நவம்பர் (ஹி.ச)
இந்தியாவின் அரசியலமைப்புச் சட்டம் ஏற்கப்பட்ட நாளான இன்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் எக்ஸ் தளத்தில் நினைவுகூர்ந்து பகிர்ந்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது,
இன்று நம் பாரத தேசத்தின் வரலாற்றில் ஒரு முக்கியமான நாள். நமது நாட்டின் இறையாண்மை, மக்களாட்சி, சமத்துவம், சமூகநீதி, சுதந்திரம் போன்ற உயர்ந்த கோட்பாடுகளுக்கு உயிர் புகட்டிய அரசியலமைப்புச் சட்டம் ஏற்கப்பட்ட நாள்.
இந்த மகத்தான அரசியலமைப்பு, ஒவ்வொரு பாரத குடிமகனுக்கு பாதுகாப்பான வாழ்க்கை, உரிமைகள், சம வாய்ப்புகள், மரியாதை, மற்றும் முன்னேற்றப் பாதை வழங்கும் சக்திவாய்ந்த ஆவணம்.
இந்த நாள், நம் அரசியலமைப்பை உருவாக்கிய பாரத ரத்னா டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் தலைமையிலான அரசியலமைப்புக் குழுவின் அர்ப்பணிப்பு, தியாகம் மற்றும் முன்னோக்கிய சிந்தனையை நினைவுகூரும் தருணமாகும்.
இன்று, நம் அரசியலமைப்பின் மாண்பையும், கொள்கைகளையும் நெஞ்சில் நிறுத்தி நம் செயலில் பிரதிபலிப்போம், ஜெய் ஹிந்த் என்று அவர் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
Hindusthan Samachar / P YUVARAJ