Enter your Email Address to subscribe to our newsletters

விழுப்புரம், 26 நவம்பர் (ஹி.ச.)
விழுப்புரம் மாவட்டம் தைலாபுரம் தோட்டத்தில் பா.ம.க. மாவட்ட செயலாளர்கள், தலைவர்கள் கூட்டம் நடைபெற்றது. பா.ம.க நிறுவனர் ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் பா.ம.க. கவுரவ தலைவர் ஜி.கே.மணி, முன்னாள் தலைவர் தீரன், பா.ம.க. பொதுச்செயலாளர் முரளி சங்கர், அருள் எம்.எல்.ஏ. தலைமை நிலைய செயலாளர், அன்பழகன், மாநில நிர்வாகிகள், கட்சி அமைப்பு ரீதியாக உள்ள 108 மாவட்ட செயலாளர்கள், மாவட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் யாருடன் கூட்டணி அமைப்பது, எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடுவது என்பது குறித்து ராமதாஸ் கட்சி நிர்வாகிகளுடன் கலந்துரையாடினார்.
கூட்டத்தின் முடிவில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய ராமதாஸ் கூறியதாவது,
சேலம் மாவட்டம் ஆத்தூரில் உள்ள தலைவாசலில் டிசம்பர் 30-ம் தேதி பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளது. கூட்டணி குறித்து பொதுக்குழுவில் பொதுக்குழுவில் கட்சியின் நிர்வாகிகளிடம் கருத்து கேட்டு அதன் அடிப்படையில் கூட்டணி குறித்து முடிவு செய்யப்படும். சாதிவாரி கணக்கெடுப்பை முன்னெடுக்காத தமிழக அரசை கண்டித்து டிச.12-ந்தேதி மாநில முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Hindusthan Samachar / vidya.b