சென்னையில் நாளை மின்நுகர்வோர் குறை தீர்க்கும் கூட்டம்
சென்னை, 3 நவம்பர் (ஹி.ச.) சென்னை மாவட்டத்தில் 4 கோட்டங்களில் நாளை (நவம்பர் 4 ஆம் தேதி) மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறவுள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு மின்பகிர்மான கழகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, சென்னை மாவ
சென்னையில் நாளை மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்


சென்னை, 3 நவம்பர் (ஹி.ச.)

சென்னை மாவட்டத்தில் 4 கோட்டங்களில் நாளை (நவம்பர் 4 ஆம் தேதி) மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறவுள்ளது.

இது தொடர்பாக தமிழ்நாடு மின்பகிர்மான கழகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது,

சென்னை மாவட்டம் மயிலாப்பூர், தண்டையார்பேட்டை, அம்பத்தூர் மற்றும் கே.கே.நகர் கோட்டங்களில் 4-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணிக்கு மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறவுள்ளது.

இந்த கூட்டத்தில் பொதுமக்கள் கலந்து கொண்டு மின்சாரத் துறை சார்ந்த குறைகளை தெரிவித்து நிவாரணம் பெற்றுக் கொள்ளலாம் என சென்னை மையம், மேற்கு, தெற்கு மற்றும் வடக்கு ஆகிய மின் பகிர்மான வட்டங்களின் மேற்பார்வை பொறியாளர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / vidya.b