Enter your Email Address to subscribe to our newsletters


கோவை, 3 நவம்பர் (ஹி.ச.)
தனியார் கல்லூரியில் முதுகலை முதலாம் ஆண்டு படித்து வரும் கல்லூரி மாணவி நேற்று இரவு விமான நிலையம் பின்புறம் உள்ள காலி இடத்தில் பேசிக்கொண்டிருந்த பொழுது மூன்று பேர் கொண்ட கும்பலால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானார்.
அந்த கும்பல் இருவரையும் தாக்கியதில் ஆண் நண்பர் படு காயங்களுடன் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அந்த கல்லூரி மாணவியும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்
அந்த மூன்று பேர் கொண்ட கும்பல் ஆண் நண்பரின் காரையும் தாக்கியுள்ளனர் தற்பொழுது அந்த காரை மீட்டு பீளமேடு காவல் நிலையத்தில் வைத்துள்ளனர்
கார்- வெள்ளை நிற Swift கார் TN37EY4249
காருக்குள் கண்ணாடி சில்களும் பெண்கள் பயன்படுத்தும் மணி பர்ஸ் ஆகியவை உள்ளது.
Hindusthan Samachar / V.srini Vasan