Enter your Email Address to subscribe to our newsletters

திருவண்ணாமலை, 3 நவம்பர் (ஹி.ச.)
திருவண்ணாமலை மாநகரில் அமைந்துள்ள அருணாசலேஸ்வரர் கோவிலின் நான்கு மாட வீதியில் உள்ள ஸ்ரீ கற்பக விநாயகர் கோவிலில் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க நான்கு கால யாக பூஜை நடைபெற்று கலசம் புறப்பட்டு கோபுரம் உச்சியில் உள்ள கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது,
ஆயிரக்கணக்கான பத்திரங்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
கோவிலின் நான்கு மாட வீதியில் அமைந்துள்ள 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு கற்பக விநாயகர் கோவிலில் கடந்த ஆறு மாத காலமாக கோவில் புனரமைக்கும் பணி நடைபெற்று வந்தது.
இந்நிலையில் கற்பக விநாயகர் கோவிலில் பணிகள் அனைத்தும் நிறைவடைந்த நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு முதல் கால யாக பூஜையுடன் தொடங்கி நேற்று காலையில் இரண்டாம் காலை யாக பூஜையும், அதனை தொடர்ந்து மாலையில் மூன்றாம் கால யாக பூஜையும், இன்று காலையில் 108 மூலிகை பொருட்களைக் கொண்டு நான்காம் கால யாக பூஜை நடைபெற்று சிவாச்சாரியார் வேத மந்திரங்கள் முழங்க பூர்ணாஹுதி செய்தனர், அதனை தொடர்ந்து யாக சாலையில் வைக்கப்பட்ட கலச நீரை கோவிலை சுற்றி வந்து கோபுர உச்சியில் உள்ள கலசத்திற்கு மேல வாத்தியங்கள் முழங்க மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது.
இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Hindusthan Samachar / ANANDHAN