உத்தரகாண்டில் நிலநடுக்கம் - தேசிய நில அதிர்வு மையம் தகவல்
புதுடெல்லி, 30 நவம்பர் (ஹி.ச.) உத்தரகாண்ட் மாநிலத்தின் சாமோலி பகுதியில் இன்று (நவ 30) நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இன்று (நவ 30) காலை 10.27 மணியளவில் ரிக்டர் அளவில் 3.7 ஆக நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. 5 கி.
உத்தரகாண்டில் நிலநடுக்கம் - தேசிய நில அதிர்வு மையம் தகவல்


புதுடெல்லி, 30 நவம்பர் (ஹி.ச.)

உத்தரகாண்ட் மாநிலத்தின் சாமோலி பகுதியில் இன்று (நவ 30) நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இன்று

(நவ 30) காலை 10.27 மணியளவில் ரிக்டர் அளவில் 3.7 ஆக நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

5 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், 30.19 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 79.48 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் இருக்கும் என முதலில் தீர்மானிக்கப்பட்டது.

இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் மற்றும் பாதிப்பு குறித்து எந்தவித தகவலும் உடனடியாக வெளியாகவில்லை.

Hindusthan Samachar / vidya.b