Enter your Email Address to subscribe to our newsletters

திருவள்ளூர், 30 நவம்பர் (ஹி.ச.)
மஞ்சப்பை பயன்பாட்டை மீண்டும் உயிர்ப்பித்து, தங்கள் வளாகத்தை பிளாஸ்டிக் இல்லாததாக மற்றும் சிறந்த 3 பள்ளிகள், 3 கல்லூரிகள் மற்றும் 3 வணிக நிறுவனங்களுக்கு மஞ்சப்பை விருது வழங்கப்பட உள்ளது.
இதன்படி, முதல் பரிசாக ரூ.10 லட்சமும் 2ம் பரிசாக ரூ.5 லட்சமும் 3 ம் பரிசாக ரூ.3 லட்சமும் வழங்கப்பட உள்ளது. தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் ஒற்றைப் பயன்பாட்டு பிளாஸ்டிக்குகளுக்கு மாற்றாக சுற்றுச் சுழலுக்கு உகந்த மாற்றுப் பொருட்கள் பயன்படுத்துவதை ஊக்குவிப்பதற்கும் தங்கள் வளாகங்களுக்கு உள்ளேயும் வெளியேயும் ஆக்கப்பூர்வமான முயற்சிகள் மூலம் தடையை அமல்படுத்துவதற்கும் வளாகத்தை பிளாஸ்டிக் இல்லாததாக மாற்றுவதற்கும் முன்மாதிரியான பங்களிப்பைச் செய்த பள்ளிகள், கல்லூரிகள், வணிக நிறுவனங்களுக்கு மஞ்சப்பை விருதுகளை வழங்க முன்மொழிகிறது.
இந்த விருதிற்கு www.tntiruvallurawards.com என்ற இணையதளத்தில் மூலம் விண்ணப்பிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். விண்ணப்பங்களில் மென் நகலுடன் 2 அச்சுப் பிரதிகள் மாவட்ட கலெக்டரிடம் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
மேலும், இதற்கான விண்ணப்ப படிவத்தை தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய வலைத்தளத்தில் இருந்து www.tnpcb.gov.in பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பங்களின் அனைத்து இணைப்புகளிலும் தனிநபர், அமைப்பு தலைவர் முறையாக கையொப்பமிட வேண்டும்.
விண்ணப்பங்களின் மென் நகலுடன், 2 அச்சுப் பிரதிகள் மாவட்ட கலெக்டரிடம் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
15.1.2026. தேதிக்குள் விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டும் என திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / vidya.b