Enter your Email Address to subscribe to our newsletters

நெல்லை, 4 நவம்பர் (ஹி.ச.)
திருநெல்வேலி இட்டேரி சீனிவாசா அவென் பகுதியைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன்.
இவர் மருத்துவர் ஒருவருக்கு ஓட்டுனராக பணிபுரிந்துள்ளார்.
இந்நிலையில் பெருமாள்புரம் அருகே உள்ள திருமால் நகர் டாஸ்மாக் கடை அருகே தனது நண்பரான மகிழ்ச்சி நகரை சேர்ந்த செல்வம் என்பவருடன் மது அருந்தியுள்ளார்.
அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு தகராக மாறி உள்ளது. இந்நிலையில் செல்வம் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து பாலகிருஷ்ணனை பலமாக குத்தியுள்ளார்.
இதில் படுகாயம் அடைந்த பாலகிருஷ்ணனை அங்கிருந்தவர்கள் மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து செல்வத்தை கைது செய்து பெருமாள் புரம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Hindusthan Samachar / ANANDHAN