Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 4 நவம்பர் (ஹி.ச.)
பயணிகளின் கோரிக்கைக்கு ஏற்ப நவ 8 ஆம் தேதி காரைக்குடி-மைசூர் இடையே சிறப்பு ரெயில் இயக்கப்படவுள்ளது.
இது தொடர்பாக தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,
மைசூரில் இருந்து வருகிற 8-ந்தேதி இரவு 9.20 மணிக்கு புறப்பட்டு காரைக்குடி செல்லும் சிறப்பு ரெயில் (வண்டி எண்.06243), மறுநாள் காலை 11 மணிக்கு காரைக்குடி வந்தடையும்.
மறுமார்க்கமாக, காரைக்குடியில் இருந்து வருகிற 9-ந்தேதி மாலை 6.45 மணிக்கு புறப்பட்டு மைசூர் செல்லும் சிறப்பு ரெயில் (06244), மறுநாள் காலை 7.45 மணிக்கு மைசூர் சென்றடையும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / vidya.b