முன் அனுமதி பெற்றே தற்காலிக கொடிக்கம்பங்களை அமைக்க வேண்டும் - சென்னை மாநகராட்சி அறிவிப்பு
சென்னை, 5 நவம்பர் (ஹி.ச.) சென்னையில் தேர்தல் பரப்புரை ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் தற்காலிக கொடிக்கம்பங்களை அமைக்க மாநகராட்சியிடம் அனுமதி பெற வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பெருநகர சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள
முன் அனுமதி பெற்றே தற்காலிக கொடிக்கம்பங்களை அமைக்க வேண்டும் - சென்னை மாநகராட்சி அறிவிப்பு


சென்னை, 5 நவம்பர் (ஹி.ச.)

சென்னையில் தேர்தல் பரப்புரை ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் தற்காலிக கொடிக்கம்பங்களை அமைக்க மாநகராட்சியிடம் அனுமதி பெற வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பெருநகர சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது,

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கூட்டங்கள், தேர்தல் பரப்புரை, கருத்தரங்கம் ஊர்வலம், ஆர்ப்பாட்டம், திருவிழா போன்ற நிகழ்வுகளுக்காக தற்காலிக கொடிக்கம்பங்கள் அமைக்க மாநகராட்சியிடம் முன் அனுமதி பெற வேண்டும்.

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற, பெருநகர சென்னை மாநகராட்சியிடம் முன் அனுமதி பெற்ற பிறகே தற்காலிக கொடிக்கம்பங்கள் அமைக்கப்பட வேண்டும்.

முன் அனுமதியின்றி நிறுவப்படும் தற்காலிக கொடிக்கம்பங்கள் எவ்வித முன்னறிவிப்பும் இல்லாமல் அகற்றப்படும்.

இவ்வாறு பெருநகர சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

Hindusthan Samachar / vidya.b