பராமரிப்பு பணிகள் காரணமாக சென்னை கடற்கரை - விழுப்புரம் பயணிகள் ரெயில் பகுதி நேர ரத்து - தெற்கு ரெயில்வே அறிவிப்பு
சென்னை, 5 நவம்பர் (ஹி.ச.) பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள உள்ளதால் ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக தெற்கு ரெயில்வே சென்னை கோட்டம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- சென்னை எழும்பூர்-விழுப்புரம் வழித்தடத்தில்
பராமரிப்பு பணிகள் சென்னை கடற்கரை - விழுப்புரம் பயணிகள் ரெயில் பகுதி நேர ரத்து - தெற்கு ரெயில்வே அறிவிப்பு


சென்னை, 5 நவம்பர் (ஹி.ச.)

பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள உள்ளதால் ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தெற்கு ரெயில்வே சென்னை கோட்டம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சென்னை எழும்பூர்-விழுப்புரம் வழித்தடத்தில் உள்ள திண்டிவனம் பணிமனையில் இன்று (புதன்கிழமை), 8 ஆகிய தேதிகளில் மதியம் 12.30 மணி முதல் மாலை 4 மணி வரையில் (3 மணி நேரம் 30 நிமிடம்) பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள உள்ளதால் ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதன் விவரம் வருமாறு:-

தாம்பரத்தில் இருந்து இன்று (புதன்கிழமை), 8 ஆகிய தேதிகளில் காலை 9.45 மணிக்கு புறப்பட்டு விழுப்புரம் செல்லும் பயணிகள் ரெயில் (வண்டி எண்.66045), ஒலக்கூர்-விழுப்புரம் இடையே பகுதி நேர ரத்து செய்யப்படுகிறது.

விழுப்புரத்தில் இருந்து இன்று (புதன்கிழமை), 8 ஆகிய தேதிகளில் மதியம் 1.40 மணிக்கு புறப்பட்டு சென்னை கடற்கரை வரும் பயணிகள் ரெயில் (66046) ஒலக்கூர்-விழுப்புரம் இடையே ரத்து செய்யப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / JANAKI RAM