Enter your Email Address to subscribe to our newsletters

நெல்லை, 5 நவம்பர் (ஹி.ச.)
தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலம் பகுதியை சேர்ந்த மென்பொருள் பொறியாளர் கவின் செல்வகணேஷ் (27) கடந்த ஜூலை மாதம் 27 ஆம் தேதி, திருநெல்வேலி மாவட்டம் கேடிசி நகரில் ஆணவக் கொலை செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் கேடிசி நகரைச் சேர்ந்த சுர்ஜித் என்ற இளைஞர் கைது செய்யப்பட்டார். அவர் மீது குண்டர் தடுப்பு சட்டமும் பாய்ந்தது.
இதையடுத்து கொலை செய்த சுர்ஜித்தின் தந்தை, சார்பு ஆய்வாளர் சரவணன் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த வழக்கு விசாரணை சிபிசிஐடி போலீஸ் வசம் ஒப்டைக்கப்பட்ட நிலையில் அவர்கள் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் சிபிசிஐடி போலீசார் நடத்திய விசாரணையில் சுர்ஜித் உறவினரான ஜெயபாலன் என்கிற இளைஞரும் சிக்கினார்.
கவின் செல்வகணேஷை கொலை செய்த சுர்ஜித் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்கள், ரத்தக்கறை படிந்த உடைகளை தனது சித்தி மகன் ஜெயபாலன் வீட்டில் மறைத்து வைத்ததாக கூறப்படுகிறது. இதற்கு ஜெயபாலன் உடந்தையாக இருந்தது உறுதி செய்யப்பட்டதில், அவரும் கைது செய்யப்பட்டார்.
இந்த நிலையில் சுர்ஜித்தின் உறவினரான ஜெயபால், ஜாமீன் கோரி நெல்லை கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த ஜாமீன் மனு 2வது கூடுதல் மாவட்ட நீதிபதி ஹேமா முன்பு இன்று (நவம்பர் 5) விசாரணைக்கு வந்தது. அப்போது, ஜெயபாலுக்கு ஜாமீன் வழங்குவதற்கு பாதிக்கப்பட்டவர் தரப்பில் கடும் ஆட்சேபனை தெரிவித்தும். அரசு தரப்பு சிறப்பு வக்கீல் கந்தசாமியும் தனது தரப்பு பதிலையும் நீதிமன்றத்தில் இன்று தாக்கல் செய்தனர்.
தொடர்ந்து நீதிபதி, ஜெயபாலின் ஜாமீன் மனு மீதான விசாரணையை வரும் 10ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
Hindusthan Samachar / ANANDHAN