Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 5 நவம்பர் (ஹி.ச.)
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசியர்கள் பணியின்போது உயிரிழந்தால் அவர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் அரசு பணி வழங்கப்பட்டு வருகின்றது.
அந்த வகையில் அரசு பணியின் போது உயிரிழந்த அரசு பணியாளர்களின் சட்டப்பூர்வ வாரிசுதாரர்கள் கருணை அடிப்படையிலான பணிக்கு ‘ஆன்லைன்’ மூலம் மட்டுமே விண்ணப்பிக்கும் வகையில் தமிழ்நாடு குடிமைப்பணிகள்(கருணை அடிப்படையிலான பணி நியமனம்)விதிகளில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது.
அதன்படி, பணியின் போது உயிரிழந்த அரசு பணியாளர்களின் சட்டப்பூர்வ வாரிசுதாரர்கள் கருணை பணி கோரி விண்ணப்பிக்க www.tncgpa.tn.gov.in என்ற புதிய வலைதளத்தை உருவாக்கி தமிழக அரசின் தலைமை செயலாளர் முருகானந்தம் அரசாணை வெளியிட்டுள்ளார்.
இந்த வலைதளம் கடந்த
31-ந் தேதியில் இருந்து செயல்பாட்டுக்கு வந்துள்ளது என்றும், இனிமேல் கருணை அடிப்படையிலான பணி கோருபவர்கள் இந்த வலைதளம் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என்றும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / vidya.b