குற்றால அருவிகளில் அதிகரித்து காணப்பட்டு வரும் சுற்றுலாப் பயணிகள் கூட்டம்
தென்காசி, 7 நவம்பர் (ஹி.ச.) தென்காசி மாவட்டத்தில் உள்ள முக்கிய சுற்றுலா தளங்களில் ஒன்றான குற்றாலம் பகுதியில் உள்ள அனைத்து அருவிகளிலும் தற்போது தண்ணீரானது சீராக கொட்டி வரும் நிலையில், சீராக கொட்டி வரும் தண்ணீரில் ஏராளமான சுற்றுலா பயணிகள் ஆனந்த குளி
Old Cuttralam Falls


தென்காசி, 7 நவம்பர் (ஹி.ச.)

தென்காசி மாவட்டத்தில் உள்ள முக்கிய சுற்றுலா தளங்களில் ஒன்றான குற்றாலம் பகுதியில் உள்ள அனைத்து அருவிகளிலும் தற்போது தண்ணீரானது சீராக கொட்டி வரும் நிலையில், சீராக கொட்டி வரும் தண்ணீரில் ஏராளமான சுற்றுலா பயணிகள் ஆனந்த குளியலிட்டு வருகின்றனர்.

குறிப்பாக, குற்றாலம் பகுதியில் உள்ள குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, சிற்றருவி, புலியருவி உள்ளிட்ட 4 அருவிகளில் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், இன்று வெள்ளிக்கிழமை என்ற போதும் குற்றால அருவிகளில் சுற்றுலா பயணிகள் கூட்டம் என்பது கணிசமாக அதிகரித்து காணப்பட்டு வருகிறது.

மேலும், இன்னும் சில தினங்களில் ஐயப்ப பக்தர்கள் சீசனானது தொடங்கப்பட உள்ள நிலையில், தற்போது முதலே சுற்றுலா பயணிகளின் கூட்டம் என்பது வெகுவாக அதிகரித்து காணப்பட்டு வருவதால் அப்பகுதியில் உள்ள வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Hindusthan Samachar / ANANDHAN