டிசம்பர் 2-ம் தேதி வாராணசியில் காசி தமிழ்ச் சங்கமம் 4.0 நிகழ்ச்சியை தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி
புதுடெல்லி, 7 நவம்பர் (ஹி.ச.) உத்தர பிரதேச மாநிலம் காசி எனும் வாராணசி​யில் கடந்த 2022-ம் ஆண்டு காசி தமிழ்ச் சங்​கமம் நிகழ்ச்சி முதல் முறை​யாக நடத்​தப்​பட்​டது. வாராணசிக்​கும் தமிழ்​ நாட்​டுக்​கும் உள்ள பண்​டைய காலம் முதல் உள்ள தொடர்பை வலுப்
டிசம்பர் 2-ம் தேதி வாராணசியில் காசி தமிழ்ச் சங்கமம் 4.0 நிகழ்ச்சியை தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி


புதுடெல்லி, 7 நவம்பர் (ஹி.ச.)

உத்தர பிரதேச மாநிலம் காசி எனும் வாராணசி​யில் கடந்த 2022-ம் ஆண்டு காசி தமிழ்ச் சங்​கமம் நிகழ்ச்சி முதல் முறை​யாக

நடத்​தப்​பட்​டது.

வாராணசிக்​கும்

தமிழ்​ நாட்​டுக்​கும் உள்ள பண்​டைய காலம் முதல் உள்ள தொடர்பை

வலுப்​படுத்​தும் வகை​யில் இந்​நிகழ்ச்சி நடை​பெற்​றது. வாராணசி தொகுதி

எம்​.பி.​யாக பிரதமர்

நரேந்​திர மோடி இருந்தார். எனவே, அவரே காசி

தமிழ்ச் சங்​கமம் நிகழ்ச்​சியை நடத்த

அறிவுறுத்​தி​னார்.

அதன்​படி கடந்த 3 ஆண்​டு​களாக இந்​நிகழ்ச்சி

சிறப்​பாக

கொண்​டாடப்​பட்​டது.

இந்​நிலை​யில், டிசம்​பர் 2-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை காசி தமிழ்ச் சங்​கமம் 4.0 நடை​பெற உள்​ளது.

இதற்​கான அதி​காரப்​பூர்வ அறி​விப்பை மத்​திய

கல்​வித் துறை அமைச்​சகம்

வெளி​யிட்​டுள்​ளது.

இந்த முறை

காசி

தமிழ்ச்

சங்​கமம் நிகழ்ச்​சிக்கு 7

பிரி​வினர் தமிழகத்​தில் இருந்து அழைத்து

வரப்பட

உள்​ளனர்.

மாணவர்​கள், ஆசிரியர்​கள், எழுத்​தாளர்​கள் உள்​ளிட்ட ஊடகங்​கள், வேளாண்மை மற்​றும் அதனுடன் தொடர்​புடைய துறை​கள், தொழில் வல்​லுநர்​கள் மற்​றும் கைவினைஞர்​கள், பெண்​கள் மற்​றும் ஆன்​மீக

அறிஞர்​கள்

அந்​தக்குழுக்​களில் இடம்​ பெறுகின்​றனர்.

மேலும் 1,400-க்​கும் மேற்​பட்​ட​வர்​களு​டன் 7 ரயில்​கள் தமிழ்​நாட்​டின்

ராமேஸ்​வரத்​தில் இருந்து கிளம்​பு​கிறது. முதல் குழு, நவம்​பர் 30 அன்று ரயி​லில் கிளம்பி டிசம்​பர் 2 காலை வாராணசி சேரு​கின்​றனர்.

காசி தமிழ்ச் சங்​கமம்

நிகழ்ச்​சியை டிசம்​பர் 2-ம் தேதி பிரதமர் மோடி தொடங்கி வைக்​கிறார். இதில் முதல்​வர் யோகி ஆதித்​ய​நாத் உள்ளிட்டோர் கலந்து

கொள்​கின்​றனர்.

இந்த முறை

தமிழ்ச்

சங்​கமத்​தின் நிறைவு விழாவை ராமேஸ்​வரத்​தில் நடத்த

திட்​ட​மிடப்​பட்டு வரு​கிறது. இந்​நிகழ்ச்​சி​யின் பொருளாக

‘தமிழ்

கற்​பித்​தல்’

தேர்வு

செய்​யப்​பட்​டள்​ளது.

அதன்​படி தமிழகத்​தில் இருந்து வரும் ஆசிரியர்​கள், வாரணாசி கல்​லூரி மற்​றும் பள்​ளி​களில் மாணவர்​களுக்கு தமிழ்​மொழியைக் கற்​றுக் கொடுக்க உள்​ளனர். அதே​ போல், வாரணாசி​யில் இருந்​தும் கல்​லூரி மற்​றும் பள்​ளி​களின் 300 மாணவர்​கள் 30 குழுக்​களாக

தமிழ்​நாட்​டுக்கு அனுப்பி வைக்​கப்பட உள்​ளனர்.

இவர்​கள் ஐஐடி, அண்ணா

தொழில்​நுட்​பப் பல்​கலைக்​கழகம், சாஸ்​திரா

பல்​கலைக்​கழகம் உள்​ளிட்ட முக்​கியக் கல்வி

நிலை​யங்​களுக்கு விஜ​யம் செய்ய உள்​ளனர்.

வாராணசி வருபவர்​களை பிர​யாக்​ராஜ் மற்​றும் அயோத்​திக்கு அழைத்​துச் செல்ல உள்​ளனர்.

இங்​குள்ள கோயில்​களில் தரிசனங்​கள் முடித்து

அனை​வரும் வீடு திரும்​பும்

வரையி​லான செல​வு​களை மத்​திய அரசும், உ.பி. அரசும் இணைந்து செய்​கின்​றன.

Hindusthan Samachar / JANAKI RAM