ஜனாதிபதி திரவுபதி முர்மு ஆப்பிரிக்க நாடுகளுக்கு 6 நாள் அரசு முறை பயணம்
புதுடெல்லி, 7 நவம்பர் (ஹி.ச.) ஆப்பிரிக்க கண்டத்துடனான இந்தியாவின் வளர்ச்சி கூட்டாண்மையை மேலும் விரிவுபடுத்தும் நோக்கத்துடன் ஜனாதிபதி திரவுபதி முர்மு, ஆப்பிரிக்க நாடுகளுக்கு அரசு முறை பயணம் மேற்கொள்ள உள்ளார். நாளை (சனிக்கிழமை) தொடங்கி 6 நாட்கள் அ
ஜனாதிபதி திரவுபதி முர்மு ஆப்பிரிக்க நாடுகளுக்கு 6 நாள் அரசு முறை பயணம்


புதுடெல்லி, 7 நவம்பர் (ஹி.ச.)

ஆப்பிரிக்க கண்டத்துடனான இந்தியாவின் வளர்ச்சி கூட்டாண்மையை மேலும் விரிவுபடுத்தும் நோக்கத்துடன் ஜனாதிபதி திரவுபதி முர்மு, ஆப்பிரிக்க நாடுகளுக்கு அரசு முறை பயணம் மேற்கொள்ள உள்ளார்.

நாளை (சனிக்கிழமை) தொடங்கி 6 நாட்கள் அவர் அங்கோலா மற்றும் போட்ஸ்வானா நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செல்கிறார். இந்த நாடுகளுக்கு இந்திய தலைவர் செல்லும் முதல் பயணம் இதுவாகும்.

8-ந் தேதி அங்கோலா செல்லும் அவர், 13-ந் தேதி வரை அங்கு பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்கிறார். நாடாளுமன்றத்தில் உரையாற்றவும், அங்கு வசிக்கும் இந்திய சமூக உறுப்பினர்களுடன் கலந்துரையாடவும் திட்டமிடப்பட்டு உள்ளது.

பின்னர் அங்கிருந்து போட்ஸ்வானா செல்லும் திரவுபதி முர்மு, 13-ந் தேதி வரை அங்கு முக்கிய நிகழ்வுகளில் கலந்து கொள்கிறார்.

அங்கு “இரு நாட்டு தலைவர்களும் இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து விவாதிக்கிறார்

Hindusthan Samachar / JANAKI RAM