Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 7 நவம்பர் (ஹி.ச.)
திருப்பதியில் பராமரிப்பு பணி மேற்கொள்ள இருப்பதால் வருகிற பிப்ரவரி 5-ந்தேதி வரையில் மூர்மார்க்கெட், அரக்கோணத்தில் இருந்து திருப்பதி செல்லும் பயணிகள் ரெயில் திருச்சானூர் வரையும், திருப்பதியில் இருந்து புறப்படும் ரெயில்கள் திருச்சானூரில் இருந்து புறப்பட்டு மூர்மார்க்கெட், அரக்கோணம் வரையிலும் இயக்கப்படும்.
அதன் விவரம் வருமாறு:-
அரக்கோணத்தில் இருந்து வருகிற பிப்ரவரி 5-ந்தேதி வரையில் காலை 9.15 மணிக்கு புறப்பட்டு திருப்பதி செல்லும் பயணிகள் ரெயில் (வண்டி எண்.66043), அதற்கு மாற்றாக திருச்சானூர் வரை இயக்கப்படும்.
திருப்பதியில் இருந்து வருகிற பிப்ரவரி 5-ந்தேதி வரையில் மாலை 3.40 மணிக்கு புறப்பட்டு அரக்கோணம் வரும் பயணிகள் ரெயில் (66044), அதற்கு மாற்றாக திருச்சானூரில் இருந்த மாலை 3.50 மணிக்கு புறப்பட்டு அரக்கோணம் வரும்.
திருப்பதியில் இருந்து வருகிற பிப்ரவரி 5-ந்தேதி வரையில் மதியம் 1.25 மணிக்கு புறப்பட்டு மூர்மார்க்கெட் (சென்னை சென்டிரல்) வரும் பயணிகள் ரெயில் (66070), அதற்கு மாற்றாக திருச்சானூரில் இருந்து மதியம் 1.30 மணிக்கு புறப்பட்டு மூர்மார்க்கெட் வரும்.
மூர்மார்க்கெட்டில் இருந்த வருகிற பிப்ரவரி 5-ந்தேதி வரையில் காலை 9.50 மணிக்கு புறப்பட்டு திருப்பதி செல்லும் பயணிகள் ரெயில் (66069), அதற்கு மாற்றாக திருச்சானூர் வரை இயக்கப்படும் என தெற்கு ரெயில்வே சென்னை கோட்டம் அறிவித்துள்ளது.
Hindusthan Samachar / vidya.b