தி.மு.க. 75 அறிவுத் திருவிழாவை முதல்வர் ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்கிறார்
சென்னை, 7 நவம்பர் (ஹி.ச.) தி.மு.க.வின் 75-வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, கட்சியின் இளைஞர் அணி ‘தி.மு.க 75 அறிவுத் திருவிழா’ என்னும் நிகழ்ச்சியை முன்னெடுக்கிறது. இந்த நிகழ்ச்சியை நாளை (நவ 08) சென்னை வள்ளுவர் கோட்டத்தில் காலை 9.30 மணியளவில் தி.
தி.மு.க. 75 அறிவுத் திருவிழாவை முதல்வர் ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்கிறார்


சென்னை, 7 நவம்பர் (ஹி.ச.)

தி.மு.க.வின் 75-வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, கட்சியின் இளைஞர் அணி ‘தி.மு.க 75 அறிவுத் திருவிழா’ என்னும் நிகழ்ச்சியை முன்னெடுக்கிறது.

இந்த நிகழ்ச்சியை நாளை (நவ 08) சென்னை வள்ளுவர் கோட்டத்தில் காலை 9.30 மணியளவில் தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.

மேலும், ‘காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு’ புத்தகத்தை வெளியிட்டு, ‘இருவண்ணக்கொடிக்கு வயது 75’ கருத்தரங்கத்தையும், முற்போக்கு புத்தகக்காட்சியையும் தொடங்கி வைக்க உள்ளார்.

‘காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு’ புத்தகத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் இருந்து கட்சியின் பொதுச்செயலாளரும், நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் பெற்றுக்கொள்கிறார். தி.மு.க. பொருளாளர் டி.ஆர்.பாலு, முதன்மைச்செயலாளர் கே.என்.நேரு, துணைப்பொதுச் செயலாளர்கள், இளைஞர்

அணிச்செயலாளரும், துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் மற்றும் இளைஞர் அணி துணைச்செயலாளர்கள் முன்னிலை வகிக்கும் இந்த விழாவில் ‘தன்மானம் காக்கும் கழகம்’ என்னும் மேடை நாடகமும் நடைபெறவுள்ளது.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கும் ‘இருவண்ணக்கொடிக்கு வயது 75’ என்னும் கருத்தரங்கம் 10 அமர்வுகளுடன் நாளை மற்றும் நாளை மறுநாள் என இரு நாட்கள் நடைபெறவிருக்கிறது.

துணைப்பொதுச்செயலாளர் கனிமொழி கருணாநிதி எம்.பி, அமைப்புச்செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, முன்னாள் திட்டக்குழு துணைத்தலைவர் மு.நாகநாதன், நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் உள்ளிட்டோர் தலைமை வகிக்கும் இந்த அமர்வுகளில் துணைப்பொதுச்செயலாளர் திருச்சி சிவா எம்.பி, துணைப்பொதுச்செயலாளர் ஆ.ராசா எம்.பி, திராவிடர் கழகத் துணைப்பொதுச்செயலாளர் சே.மெ.மதிவதனி உள்ளிட்ட பலர் கருத்துரை வழங்கவிருக்கின்றனர்.

நாளை மறுநாள் துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கருத்தரங்க நிறைவுரை ஆற்றவுள்ளார். நாளை முதல் 16.11.25 வரை நடைபெறவிருக்கும் ‘முற்போக்கு புத்தகக்காட்சி’யில் தினந்தோறும் புத்தர் கலைக்குழு, புதுகை பூபாளம் கலைக்குழு, கோவன் கலைக்குழு, பாப்பம்பாடி ஜமா, நிகர் கலைக்கூடம், மாற்று

ஊடகமையம் கலைக்குழு ஆகிய கலைக்குழுக்களின் கலைநிகழ்ச்சிகளும் பகுத்தறிவு மேஜிக் நிகழ்ச்சியும் நடைபெறவுள்ளதாக திமுக இளைஞரணி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / vidya.b