Enter your Email Address to subscribe to our newsletters

சபரிமலை, 8 நவம்பர் (ஹி.ச.)
சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கான பாரம்பரிய பெருவழிப் பாதை வரும் 17-ம் தேதி திறக்கப்பட உள்ளது.
இதற்காக வனப் பாதையை தூய்மை செய்யும் பணி வழிபாடுகளுடன் இன்று தொடங்கியது.
சபரிமலை ஐயப்பன் கோயிலில்
வரும் நவம்பர் 16-ம் தேதி மாலை நடை திறக்கப்பட்டு நவம்பர் 17-ம் தேதி முதல் மண்டல பூஜைக்கான வழிபாடுகள் தொடங்க உள்ளன.
ஆன்லைன் மூலமே பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கின்றனர்.
இதற்காக கடந்த நவ.1-ம் தேதி முதல் முன்பதிவு தொடங்கின.
மேலும் மாதாந்திர வழிபாட்டுக்கு வனப் பாதைகளில் பக்தர்கள் அனுமதிக்கப்படுவதில்லை.
தற்போது மண்டல காலம் தொடங்க உள்ளதால் பாரம்பரிய பெருவழிப் பாதையான எருமேலி - கல்லக்கட்டி, வண்டிப் பெரியாறு - சத்திரம் உள்ளிட்ட வனப்பகுதி வழியே செல்ல பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர்.
இதற்காக தரிசன முன்பதிவின் போதே பக்தர்கள் தாங்கள் செல்ல விரும்பும் பாதையையும் தேர்வு செய்ய வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்த முன் பதிவின் அடிப்படியிலே ஐயப்ப பக்தர்கள் சம்பந்தப்பட்ட வனப்பாதையில் செல்ல முடியும்.
இந்த வனப்பாதைகள் பெருவழிப் பாதை வரும் நவ.17-ம் தேதி முதல் பயன்பாட்டுக்கு கொண்டு வர வனத்துறை முடிவு செய்துள்ளது.
இதற்காக கரிமலையில்,
சிறப்பு பூஜைகள் வழிபாடுகள் செய்யப்பட்டு சீரமைப்புப் பணிகள் (நவ.6) தொடங்கின.
மண்டல காலம் முதல் நாளான நவ.17-ம் தேதி காலை நுழைவுப் பகுதியில் சிறப்பு பூஜை வழிபாடுகள் நடத்தப்பட்டு ஐயப்ப பக்தர்கள் பெருவழிப் பாதை வழியே அனுமதிக்கப்படுவர் என்று வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
Hindusthan Samachar / Durai.J