குடும்பத்துடன் நேரில் வந்து எனக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய முதலமைச்சருக்கு நன்றி - கமல்ஹாசன் எம்.பி. நெகிழ்ச்சி
சென்னை, 8 நவம்பர் (ஹி.ச.) மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவரும் நடிகருமான கமல்ஹாசனின் பிறந்த நாளை முன்னிட்டு, முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஆகியோர் அவரது வீட்டுக்குச் சென்று வாழ்த்து தெரிவித்தனர். இது குறித்த புகைப்படங்களை தனது எக்ஸ்
குடும்பத்துடன் நேரில் வந்து எனக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய முதலமைச்சருக்கு நன்றி -  கமல்ஹாசன் எம்.பி. நெகிழ்ச்சி


குடும்பத்துடன் நேரில் வந்து எனக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய முதலமைச்சருக்கு நன்றி -  கமல்ஹாசன் எம்.பி. நெகிழ்ச்சி


சென்னை, 8 நவம்பர் (ஹி.ச.)

மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவரும் நடிகருமான கமல்ஹாசனின் பிறந்த நாளை முன்னிட்டு, முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஆகியோர் அவரது வீட்டுக்குச் சென்று வாழ்த்து தெரிவித்தனர்.

இது குறித்த புகைப்படங்களை தனது எக்ஸ் தளத்தில் இன்று

(நவ 08) பகிர்ந்துள்ள நடிகர் கமலஹாசன் கூறியிருப்பதாவது,

என்னுடைய அழைப்பை ஏற்று எனது இல்லத்துக்கு வருகை தந்து, என்னையும் என் மூத்த சகோதரர் சாருஹாசன் அவர்களையும் கௌரவப்படுத்திய மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர், அன்புக்குரிய நண்பர் திரு. ஸ்டாலின் மற்றும் திருமதி. துர்கா ஸ்டாலின் தம்பதியருக்கும், மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர், என் அன்புக்குரிய இளவல் திரு. உதயநிதி ஸ்டாலின் மற்றும் திருமதி. கிருத்திகா உதயநிதி தம்பதியருக்கும், என் அன்புக்குரிய நண்பர் திரு. சபரீஸன் அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

பொதுவாக அப்பாவின் நண்பர்களோடு பிள்ளைகள் நெருக்கம் காட்ட மாட்டார்கள். மரியாதையுடனான சிறு விலகல் இருக்கும். ஆனால், முத்தமிழறிஞர் உடனான எனது உறவு மூன்று தலைமுறைத் தாண்டிய நெருக்கம் கொண்டது. நிபந்தனைகளற்ற தூய பேரன்பினால், அளவு கடந்த மரியாதையால் பிணைத்துக்கட்டப்பட்டது எங்கள் உறவு.

அதை உறுதி செய்யும் வகையில் அமைந்தது இந்த சந்திப்பு.

நேற்றைய மாலை விருந்தில் மகிழ்ந்தோம், நெகிழ்ந்தோம்.

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

Hindusthan Samachar / vidya.b