Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 9 நவம்பர் (ஹி.ச.)
உத்தரகாண்டின் பாகேஷ்வர் பகுதியில் இன்று(நவ 09 ) மதியம் 2.40 மணியளவில் ரிக்டர் அளவில் 3.6 ஆக நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், 30.02 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 79.95 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் இருக்கும் என முதலில் தீர்மானிக்கப்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் மற்றும் பாதிப்பு குறித்து எந்தவித தகவலும் உடனடியாக வெளியாகவில்லை.
இதற்கு முன்னதாக அந்தமான் தீவுகளில் பலத்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தேசிய நிலநடுக்க ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6-ஆக பதிவாகியுள்ளது.
அந்தமான் கடல் பகுதிகளில் ஏற்பட்ட நிலநடுக்கம் கடல் தரைக்கு கீழே 9 கி.மீ ஆழத்தில் மையம் கொண்ட்டுள்ளதாக தேசிய நிலநடுக்க ஆய்வு மையம் தனது எக்ஸ் தளத்தில் தகவல் வெளியிட்டுள்ளது.
Hindusthan Samachar / vidya.b