Enter your Email Address to subscribe to our newsletters

நாகை, 9 நவம்பர் (ஹி.ச.)
நாகை மாவட்டம் வாழக்கரை பகுதியைச் சேர்ந்தவர் ராஜாராமன். கிராம நிர்வாக அலுவராக பணியாற்றி வந்த அவர் கடந்த 2024 முதல் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு இருந்தார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் வழக்கு விசாரனைக்காக நாகை நீதிமன்றத்திற்கு சென்றவர் இரவில் செல்லூர் ஈசிஆர் சாலையில் முகத்தில் பயங்கர காயங்களுடன் உயிரிழந்து கிடந்தார்.
இதுகுறித்து போலிசார் நடத்திய விசாரணையில் இரவில் ராஜாராமன் அந்த பகுதியில் போதையில் படுத்திருந்ததாகவும், அப்போது அங்கு வந்த செல்லுரைச் சேர்ந்த நிவேதா, ஶ்ரீகவி ஆகிய இரண்டு திருநங்கைகள் அவர் முகத்தில் கருங்கல்லை தூக்கி போட்டு கொலை செய்துவிட்டு அவரிடமிருந்த பணம், செல்போன், மோதிரம் ஆகியவற்றை பறித்து சென்றாக கூறப்படுகிறது.
அதனைத் தொடர்ந்து அவர்கள் இருவரையும் போலிசார் கைது செய்தனர்.
Hindusthan Samachar / ANANDHAN