Enter your Email Address to subscribe to our newsletters

திருநெல்வேலி, 9 நவம்பர் (ஹி.ச.)
திருநெல்வேலி மின்பகிர்மான வட்டத்திற்கு உட்பட்ட திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள வள்ளியூர் கோட்டம் மற்றும் தென்காசி மாவட்டத்தில் உள்ள தென்காசி கோட்டத்திற்கு உட்பட்ட துணைமின் நிலையங்களில் வருகின்ற 11.11.2025, செவ்வாய்கிழமை அன்று மின்வாரிய மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக மின்தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து வள்ளியூர் மின்கோட்ட செயற்பொறியாளர் வளன் அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
திசையன்விளை, களக்காடு மற்றும் விஜயாபதி துணைமின் நிலையங்களில் வருகின்ற 11.11.2025, செவ்வாய்க்கிழமை அன்று மாதாந்திர பராமரிப்பு பணிகள் செய்திட உத்தேசிக்கப்பட்டுள்ளதால் மேற்சொன்ன துணைமின் நிலையங்களில் மின்விநியோகம் தடை செய்யப்படும்.
எனவே பின்வரும் ஊர்கள்
மற்றும் அதனை சார்ந்த பகுதிகளில் கீழ்குறிப்பிட்டுள்ள நேரங்களில் மின் விநியோகம் இருக்காது.
காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை:
களக்காடு நகரம், பெருமாள்குளம், சாலைபுதூர், SN பள்ளிவாசல், மாவடி, டோனாவூர், புலியூர்குறிச்சி, கோதைசேரி, வடமலைசமுத்திரம், கருவேலன்குளம், கோவிலம்மாள்புரம், வடுகச்சிமதில்.
காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை:
திசையன்விளை, மகாதேவன்குளம், இடையன்குடி, அப்புவிளை, ஆனைகுடி, முதுமொத்தான்மொழி, கரைசுத்துஉவரி, கூட்டபணை, கூடுதாளை, குட்டம், விமணங்குடி.
கூத்தன்குழி, முருகானந்தபுரம், உதயத்தூர், சிதம்பரபுரம், பரமேஸ்வரபுரம், இளையநயினார்குளம் ஆகிய இடங்களில் மின்தடை செய்யப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
தென்காசி கோட்ட செயற்பொறியாளர் (பொறுப்பு) கற்பகவிநாயகசுந்தரம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
மங்கம்மாள் சாலை துணைமின் நிலையத்தில் வருகின்ற 11.11.2025, செவ்வாய்க்கிழமை அன்று மாதாந்திர பராமரிப்பு பணிகள் செய்திட உத்தேசிக்கப்பட்டுள்ளதால் பின்வரும் ஊர்கள் மற்றும் அதனை சார்ந்த பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது.
அதன்படி தென்காசி புதிய பேருந்து நிலையம், மங்கம்மாள் சாலை பகுதிகள், சக்திநகர், காளிதாசன்நகர், ஹவுசிங்போர்டு காலனி மற்றும் கீழப்புலியூர், தென்காசி
ஆகிய இடங்களில் மின்தடை செய்யப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / vidya.b