ரேஷன் கடைகளில் கோதுமை தட்டுப்பாடு - எடப்பாடி பழனிச்சாமி தமிழக அரசிற்கு கண்டனம்!
சென்னை, 9 நவம்பர் (ஹி.ச.) துவரம் பருப்பு, பாமாயிலை தொடர்ந்து தற்போது ரேஷன் கடைகளில் தற்போது கோதுமைக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தமிழக எதிர்கட்சி தலைவரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து
ரேஷன் கடைகளில் கோதுமை தட்டுப்பாடு - எடப்பாடி பழனிச்சாமி தமிழக அரசிற்கு கண்டனம்


சென்னை, 9 நவம்பர் (ஹி.ச.)

துவரம் பருப்பு, பாமாயிலை தொடர்ந்து தற்போது ரேஷன் கடைகளில் தற்போது கோதுமைக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தமிழக எதிர்கட்சி தலைவரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டியுள்ளார்.

இது குறித்து அவர் இன்று (நவ 09) எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது,

தமிழ்நாட்டில் உள்ள 12,753 ரேஷன் கடைகளில் கோதுமை இல்லை என்று செய்திகள் வருகின்றன.

இம்மாத்திற்கு 8,722 டன் கோதுமையை மத்திய அரசு ஒதுக்கீடு செய்தும், அதை முறையாக ரேஷன் கடைகளுக்கு ஸ்டாலின் மாடல் திமுக அரசு விநியோகம் செய்யவில்லை என செய்திகள் தெரிவிக்கின்றன.

ஏற்கனவே துவரம் பருப்பு, பாமாயில் தட்டுப்பாடு ஏற்பட்ட போதே, இந்த அரசை எச்சரித்தும், மிகுந்த மெத்தனப் போக்குடன் தான் செயல்பட்டது.

திமுக ஆட்சியில் மற்ற துறைகளைக் காட்டிலும், நுகர்பொருள் வாணிபக் கழகம் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கிறது போலும்.

நெல் கொள்முதல் முதல், கோதுமை விநியோகம் வரை அத்தியாவசிய பொருட்களை மக்களிடம் சேர்க்கும் பணியில் கூட Total Failure ஆக இருக்கும் திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம்.

உடனடியாக கோதுமை ரேஷன் கடைகளுக்கு சென்று சேர்வதை உறுதி செய்யுமாறு ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Hindusthan Samachar / vidya.b