Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 10 டிசம்பர் (ஹி.ச.)
தமிழ்நாட்டில் மணல் கொள்ளையை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என கனிம வள ஆணையருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மணல் கொள்ளை தொடர்பான வழக்கில் கனிமவள ஆணையர் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளார்.
தமிழ்நாட்டில் தொடரும் மணல் கொள்ளையை தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? என உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியது,
அதற்கு மணல் கொள்ளையில் ஈடுபடுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது என கனிம வள ஆணையர் பதிலளித்தார்.
மணல் கொள்ளையில் ஈடுபடுபவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் தெரிவித்தது.
நாட்டின் சொத்துகளான கனிம வளங்களை கொள்ளையடிக்க அனுமதிக்க முடியாது எனவும் மணல் கொள்ளையை தடுப்பதற்கு குறிப்பிட்ட நடவடிக்கைகள் எடுத்திருந்தாலும் அது போதுமானதாக இல்லை எனவும் உயர்நீதிமன்றம் தெரிவித்தது.
வழக்கின் விசாரணையை அடுத்த வாரத்திற்கு தள்ளிவைத்து நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், சி.குமரப்பன் அமர்வு உத்தரவிட்டுள்ளது.
Hindusthan Samachar / P YUVARAJ