தமிழ்நாடு, புதுவை சட்டப்பேரவைத் தேர்தல்கள் - டிசம்பர் 14 முதல் விருப்ப மனுக்கள் பெறப்படும் - அன்புமணி இராமதாஸ் அறிவிப்பு
சென்னை, 11 டிசம்பர் (ஹி.ச.) தமிழ்நாடு, புதுவை சட்டப்பேரவைத் தேர்தல்கள்- திசம்பர் 14 முதல் விருப்ப மனுக்கள் பெறப்படும் என பாமக தலைவர் அன்புமணி இராமதாஸ் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது, தமிழ்நாடு, ப
Anbumani


சென்னை, 11 டிசம்பர் (ஹி.ச.)

தமிழ்நாடு, புதுவை சட்டப்பேரவைத் தேர்தல்கள்-

திசம்பர் 14 முதல் விருப்ப மனுக்கள் பெறப்படும் என

பாமக தலைவர் அன்புமணி இராமதாஸ் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது,

தமிழ்நாடு, புதுச்சேரி ஆகிய மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல்கள் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெறவுள்ளன. இந்தத் தேர்தல்களில் தமிழ்நாட்டிலும், புதுச்சேரியிலும் உள்ள தொகுதிகளில் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் வேட்பாளர்களாக போட்டியிட விரும்புவோரிடமிருந்து வரும் 14.12.2025 ஞாயிற்றுக் கிழமை முதல் 20.12.2025 சனிக்கிழமை வரை ஒரு வாரத்திற்கு விருப்ப மனுக்கள் பெறப்படும் என்று பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் அறிவித்திருக்கிறார்கள்.

சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலை பனையூரில் உள்ள கட்சித் தலைவர் அலுவலகத்தில் மேற்குறிப்பிடப்பட்ட நாள்களில் தினமும் காலை 11.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை விருப்ப மனுக்கள் பெறப்படும்.

போட்டியிட விருப்பம் தெரிவிப்பதற்கான விண்ணப்பங்களை வாங்குபவர்கள் விண்ணப்பிக்க கடைசி நாளான திசம்பர் 20&ஆம் தேதி மாலை 6.00 மணிக்குள் விண்ணப்பத்தில் உள்ள விவரங்களை நிரப்பி, பனையூர் அலுவலகத்தில் தலைமை நிலைய நிர்வாகிகளிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்று அவர் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Hindusthan Samachar / P YUVARAJ