டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரனுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ள விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீக்க வேண்டும் - அமலாக்கத்துறை
சென்னை, 11 டிசம்பர் (ஹி.ச.) டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரனுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ள விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீக்க வேண்டும் என அமலாக்கத் துறை தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது அமலாக்க
Akash


சென்னை, 11 டிசம்பர் (ஹி.ச.)

டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரனுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ள விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீக்க வேண்டும் என அமலாக்கத் துறை தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது

அமலாக்கத் துறை நடவடிக்கைக்கு எதிராக ஆகாஷ் பாஸ்கரன் மற்றும் விக்ரம் ரவீந்திரன் ஆகியோர் தாக்கல் செய்த மனுக்களில் தொழிலதிபர் விக்ரம் ரவீந்திரன் வீடு, அலுவலகங்களில் சோதனை ஏதும் நடத்தப்படவில்லை என அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது

வழக்கின் இறுதி விசாரணை ஜனவரி மாதத்துக்கு தள்ளிவைத்து தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டுள்ளது

Hindusthan Samachar / P YUVARAJ