பராமரிப்பு பணிகள் காரணமாக தென்காசி மாவட்டத்தின் ஒரு சில இடங்களில் இன்று மின்தடை அறிவிப்பு
தென்காசி, 11 டிசம்பர் (ஹி.ச.) தென்காசி மாவட்டத்தில் சங்கரன்கோவில் கோட்டம், கரிவலம்வந்தநல்லூர் துணைமின் நிலையத்தில் இன்று (டிச 11) மின்வாரிய மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இது குறித்து சங்கரன்கோவில் கோட்ட செயற்பொறியாளர் பாலசுப்ரமணி
பராமரிப்பு பணி காரணமாக தென்காசி மாவட்டம் ஒரு சில இடங்களில் இன்று மின்தடை அறிவிப்பு


தென்காசி, 11 டிசம்பர் (ஹி.ச.)

தென்காசி மாவட்டத்தில் சங்கரன்கோவில் கோட்டம், கரிவலம்வந்தநல்லூர் துணைமின் நிலையத்தில் இன்று (டிச 11) மின்வாரிய மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன.

இது குறித்து சங்கரன்கோவில் கோட்ட செயற்பொறியாளர் பாலசுப்ரமணியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் கோட்டம், கரிவலம்வந்தநல்லூர் துணைமின் நிலையத்தில் இன்று (11.12.2025, வியாழக்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வாரிய மாதாந்திர பராமரிப்பு வேலைகள் நடைபெறுவதால் அன்று கரிவலம்வந்தநல்லூர், பனையூர், குவளைக்கண்ணி, கோமதிமுத்துபுரம், இடையான்குளம், துரைச்சாமியாபுரம், எட்டிச்சேரி, சென்னிகுளம், லெட்சுமியாபுரம், காரிசாத்தான், செவல்பட்டி, சுப்பிரமணியபுரம் ஆகிய ஊர்களுக்கு மின்விநியோகம் தடை செய்யப்படுகிறது.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Hindusthan Samachar / vidya.b