இன்று 4-வது நாளாக தொடரும் கண்டெய்னர் லாரிகள் வேலை நிறுத்தப் போராட்டம்
சென்னை, 13 டிசம்பர் (ஹி.ச.) சென்னையில் இயங்கும் 13 கண்டெய்னர் லாரி சங்கங்கள், மோட்டார் வெளிச்சம் அமைப்பில் உள்ள 75 வாகன உரிமையாளர்கள் சங்கங்கள் உட்பட அனைத்து டிரைலர், டாரஸ், லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர்,மோட்டார் வெளிச்சம் அமைப்பினர் லாரி உர
இன்று 4-வது நாளாக தொடரும் கண்டெய்னர் லாரிகள் வேலை நிறுத்த போராட்டம்


சென்னை, 13 டிசம்பர் (ஹி.ச.)

சென்னையில் இயங்கும் 13 கண்டெய்னர் லாரி சங்கங்கள், மோட்டார் வெளிச்சம் அமைப்பில் உள்ள 75 வாகன உரிமையாளர்கள் சங்கங்கள் உட்பட அனைத்து டிரைலர், டாரஸ், லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர்,மோட்டார் வெளிச்சம் அமைப்பினர் லாரி உரிமையாளர்கள், டிரான்ஸ் போர்டர்ஸ் புக்கிங் ஏஜென்ட்ஸ், லாரி ஓட்டுநர்கள் ஆகியோர் கடந்த டிச 10 ஆம் தேதி நள்ளிரவு முதல் கால வரையற்ற வேலை நிறுத்தத்தை அறிவித்து உள்ளனர்.

எல்லை சோதனை சாவடிகளை அகற்ற வேண்டும், டீசல் விற்பனையை ஜி.எஸ்.டி.க்குள் கொண்டு வர வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக் கைகளை வலியுறுத்தி கண்டெய்னர் லாரி சங்கங்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.

இதற்கிடையில் தண்டையார்பேட்டை ஆர்.டி.ஓ. முன்னிலையில் நேற்று (டிச 12) நடைபெறுவதாக இருந்த அனைத்து தரப்பினர் பங்கேற்கும் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை. இதனால் 4-வது நாளாக இன்றும் (டிச 13) வேலை நிறுத்த போராட்டம் தொடரும் என கண்டெய்னர் லாரி உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர்.

இந்த வேலை நிறுத்தத்தால், நாள் ஒன்றுக்கு அரசுக்கு ரூ.100 கோடி வருவாய் இழப்பு ஏற்படும் நிலை உருவாகி உள்ளது. மேலும் குளிரூட்டப்பட்ட கண்டெய்னர் லாரிகள் வாயிலாக துறைமுகத்துக்கு அனுப்பப்பட்டு கப்பல்களில் வெளியூர்களுக்கு செல்லும் பதப்படுத்தப்பட்ட உணவு பொருள்கள், இந்த வேலை நிறுத்தத்தால் கெட்டுப்போகும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து அனைத்து துறைமுக டிரைலர் உரிமையாளர்கள் கூட்டமைப்பு நிர்வாகிகள் கூறுகையில்,

உயர்த்தப்பட்ட சரக்கு வாகனங்களுக்கான வாகன தர சான்றிதழ் புதுப்பிப்பு கட்டணத்தை திரும்ப பெறும் வரை எங்களது போராட்டம் தொடரும். சென்னை துறைமுகத்தில் அனைத்து டிரெய்லர் லாரி உரிமையாளர்கள் மற்றும் டிரைவர்கள் ஏற்றுமதி, இறக்குமதி செய்ய போவதில்லை. அந்த வகையில் 5 ஆயிரம் கண்டெய்னர் லாரிகள் ஓடாது. என்று கூறினர்.

Hindusthan Samachar / vidya.b