பாமக விருப்ப மனு விநியோகம் தொடக்கம்
தமிழ்நாடு, 14 டிசம்பர் (ஹி.ச.) தமிழ்நாடு புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் இருந்து பாமகவின் சார்பில் வேட்பாளர்களாக போட்டியிட விரும்புவோர் இடமிருந்து ஞாயிற்றுக்கிழமை முதல் விருப்ப மனு பெறப்படும் என பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அ
அன்புமணி


தமிழ்நாடு, 14 டிசம்பர் (ஹி.ச.)

தமிழ்நாடு புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் இருந்து பாமகவின் சார்பில் வேட்பாளர்களாக போட்டியிட விரும்புவோர் இடமிருந்து ஞாயிற்றுக்கிழமை முதல் விருப்ப மனு பெறப்படும் என பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தமிழ்நாடு,புதுச்சேரி ஆகிய மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தல்கள் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெற உள்ளன.

இந்த தேர்தல்களில் தமிழ்நாட்டிலும், புதுச்சேரியிலும் உள்ள தொகுதிகளில் பா.ம.க.வின் சார்பில் வேட்பாளர்களாக போட்டியிட விரும்புவோரிடமிருந்து இன்று முதல் (ஞாயிறு) 20-ந்தேதி வரை ஒரு வாரத்திற்கு விருப்ப மனுக்கள் பெறப்படும் என்று பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் அறிவித்திருக்கிறார்.

சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலை பனையூரில் உள்ள கட்சித் தலைவர் அலுவலகத்தில் மேற்குறிப்பிட்ட நாட்களில் தினமும் காலை 11 மணி முதல் மாலை6 மணி வரை விருப்ப மனுக்கள் பெறப்படும்.

போட்டியிட விருப்பம் தெரிவிப்பதற்கான விண்ணப்பங்களை வாங்குபவர்கள் விண்ணப்பிக்க கடைசி நாளான டிசம்பர் 20-ந் தேதி. மாலை 6 மணிக்குள் விண்ணப்பத்தில் உள்ள விவரங்களை நிரப்பி, பனையூர் அலுவலகத்தில் தலைமை நிலைய நிர்வாகிகளிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

Hindusthan Samachar / GOKILA arumugam