இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணு மீண்டும் மருத்துவமனையில் அனுமதி
சென்னை, 14 டிசம்பர் (ஹி.ச.) இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு(வயது 100) கடந்த ஆகஸ்ட் 22ஆம் தேதி, வீட்டில் தவறி கீழே விழுந்த விபத்தில் அவரது தலையில் காயம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து உடனடியாக சென்னை தனியார் மருத்துவமனையில் அனு
இந்திய கம்யூனிஸ்ட்  மூத்த தலைவர் நல்லகண்ணு மீண்டும் மருத்துவமனையில் அனுமதி


சென்னை, 14 டிசம்பர் (ஹி.ச.)

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு(வயது 100) கடந்த ஆகஸ்ட் 22ஆம் தேதி, வீட்டில் தவறி கீழே விழுந்த விபத்தில் அவரது தலையில் காயம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து உடனடியாக சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மருத்துவர்களின் கண்காணிப்பில் சிகிச்சை வழங்கப்பட்டது.

சிகிச்சையிலிருந்த நல்லகண்ணுவிற்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதனால், மேல் சிகிச்சைக்காக உடனடியாக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

இதனையடுத்து, சுமார் ஒன்றரை மாத காலம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நல்லகண்ணு, தற்போது உடல்நலம் தேறிய நிலையில் செப்டம்பர் 11 ஆம் தேதி மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார்.

இந்த நிலையில், நல்லகண்ணு மூச்சுத்திணறல் காரணமாக மீண்டும் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மருத்துவர்களின் தொடர் சிகிச்சையால் நல்லகண்ணுவின் உடல்நிலையில் படிப்படியாக முன்னேற்றம் ஏற்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

இன்னும் சில நாட்களில் உடல்நலம் மேலும் சீராகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Hindusthan Samachar / vidya.b