விடுமுறை தினத்தை முன்னிட்டு குற்றால அருவிகளில் குவிந்து வரும் சுற்றுலா பயணிகள் கூட்டம்
தென்காசி, 14 டிசம்பர் (ஹி.ச.) தென்காசி மாவட்டத்திலுள்ள முக்கிய சுற்றுலா தளங்களில் ஒன்றான குற்றாலம் பகுதியில் உள்ள அனைத்து அருவிகளிலும் தற்போது தண்ணீரானது சீராக கொட்டி வரும் நிலையில், சீராக கொட்டி வரும் தண்ணீரில் ஆனந்த குளியல் போடுவதற்காக ஏராளமான ச
Courtallam Falls


தென்காசி, 14 டிசம்பர் (ஹி.ச.)

தென்காசி மாவட்டத்திலுள்ள முக்கிய சுற்றுலா தளங்களில் ஒன்றான குற்றாலம் பகுதியில் உள்ள அனைத்து அருவிகளிலும் தற்போது தண்ணீரானது சீராக கொட்டி வரும் நிலையில், சீராக கொட்டி வரும் தண்ணீரில் ஆனந்த குளியல் போடுவதற்காக ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர்.

குறிப்பாக, தற்போது ஐயப்ப பக்தர்கள் சீசன் காலகட்டமும் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், கூடுதலாக இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் கூடுதலாக சுற்றுலா பயணிகள் கூட்டமும் அதிகரித்து காணப்பட்டு வருகிறது.

குறிப்பாக, குற்றாலம் பகுதியில் உள்ள குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, சிற்றருவி, புலியருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் ஐயப்ப பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கூட்டம் என்பது கணிசமாக அதிகரித்து காணப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Hindusthan Samachar / ANANDHAN