நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் உள்ளிட்ட 4 அதிகாரிகள் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
சென்னை, 14 டிசம்பர் (ஹி.ச) கோயில் நிலங்களை மீட்க நடவடிக்கை எடுக்க காலதாமதம் செய்தது தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் உள்ளிட்ட 4 அதிகாரிகள் ஜனவரி 12 ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கமளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்த
Hrce


சென்னை, 14 டிசம்பர் (ஹி.ச)

கோயில் நிலங்களை மீட்க நடவடிக்கை எடுக்க காலதாமதம் செய்தது தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் உள்ளிட்ட 4 அதிகாரிகள் ஜனவரி 12 ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கமளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருப்பத்தூர் சென்ன கேசவ பெருமாள் கோயிலுக்கு சொந்தமான நிலங்களை 6 மாதங்களில் மீட்க உத்தரவிட்ட நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தவில்லை எனக் கூறி, நடராஜன் என்பவர் தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்திருந்தார்.

நிலங்களை கோயில் பெயரில் பட்டா மாற்றம் செய்வதில் ஓராண்டுக்கு மேல் காலதாமதம் செய்த திருப்பத்தூர் தாசில்தாரும் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க உத்தரவிட்டுள்ளது

இந்த வழக்கின் விசாரணை ஜனவரி 12ம் தேதிக்கு தள்ளிவைத்து தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டுள்ளது

Hindusthan Samachar / P YUVARAJ