Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 14 டிசம்பர் (ஹி.ச.)
சென்னையில் அனைத்து செல்லப் பிராணிகளையும் பதிவு செய்வதுகட்டாயம் என, மாநகராட்சி தெரிவித்தது. அவ்வாறு பதிவு உரிமம் பெறும் நாய்களுக்கு அக்., 8ம் தேதி முதல், 'மைக்ரோ சிப்' பொருத்தும் பணி நடைபெற்ற வருகிறது.
இப்பணிகளுக்காக மாநகராட்சி இனக்கட்டுப்பாட்டு மையங்கள், கால்நடை மருத்துவமனையில் சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது. இதற்கான முகாம் இன்றுடன்(டிச 14) முடியும் நிலையில், நாளை முதல் அபராதம் விதிக்கும் நடைமுறை அமலுக்கு வருவதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது.
சென்னை மாநகராட்சி இணையதளத்தில், 98,523 செல்லப்பிராணிகள் விபரங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதேநேரம், 55,319 செல்லப்பிராணிகளுக்கு மட்டுமே உரிமம் பெற்று, மைக்ரோ சிப் பொருத்தப்பட்டுள்ளன. மீதமுள்ள 43,204 செல்லப்பிராணிகளுக்கு உரிமம் பெறப்படாமல் உள்ளன. உரிமம் பெற இன்று கடைசி நாள் என்பதால், அதிகம் பேர் பதிவு உரிமம் பெற வரக்கூடும்
நாளை முதல் வீடு வீடாக செல்லப்பிராணிகள் வளர்க்கப்படுகிறதா, அதற்கான உரிமம் பெறப்பட்டுளதா என ஆய்வு செய்யப்படும்.
அவ்வாறு உரிமம் பெறாத செல்லப்பிராணி உரிமையாளருக்கு, 5,000 ரூபாய் அபராதம் விதிப்பதுடன், உரிமம் பெறுவதற்கான நடவடிக்கையும் எடுக்கப்படும் என மாநகராட்சி அறிவித்துள்ளது.
Hindusthan Samachar / vidya.b