Enter your Email Address to subscribe to our newsletters

திண்டுக்கல், 16 டிசம்பர் (ஹி.ச.)
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே இன்று (டிசம்பர் 16) அதிகாலை சென்றுகொண்டிருந்த ஆம்னி பேருந்தில் 20க்கும் மேற்பட்டோர் பயணித்தனர்.
இந்நிலையில், வேடசந்தூர் அருகே முன்னால் சென்ற கார் மீது மோதாமல் இருக்க பேருந்தை ஓட்டுனர் திருப்பியுள்ளார். அப்போது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பயணிகள் 14 பேருக்கு காயம் ஏற்பட்டது.
விபத்து குறித்து தகவலறிந்த மீட்புக்குழுவினர் விரைந்து சென்று காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர்.
இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விசாரணையில் இறங்கியுள்ளனர்.
Hindusthan Samachar / vidya.b