ஒடுக்கப்பட்ட மாணவர்களின் நலனை அடகு வைத்து ஆணவமாக செயல்படும் திமுகவிற்கு 2026 ல் பாடம் புகட்டப்படும் - நயினார் நாகேந்திரன்
சென்னை, 16 டிசம்பர் (ஹி.ச) நூற்றுக்கணக்கான அரசு மாணவர் விடுதிகளை மூடியுள்ளது கடும் கண்டனத்திற்குரியது என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது, தமிழக அ
Nainar Nagenthran


Tw


சென்னை, 16 டிசம்பர் (ஹி.ச)

நூற்றுக்கணக்கான அரசு மாணவர் விடுதிகளை மூடியுள்ளது கடும் கண்டனத்திற்குரியது என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது,

தமிழக அரசின் ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கும் அரசு மாணவர் விடுதிகளில் 100-க்கும் மேற்பட்ட விடுதிகள், குறைந்த மாணவர் சேர்க்கையின் காரணமாக மூடப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல், போலி சமூகநீதி பேசும் திமுக அரசின் இரட்டை வேடத்தை நமக்குப் பட்டவர்த்தனமாக்குகிறது.

ஆதிதிராவிடர் மாணவர் நலன் குறித்த நமது கோரிக்கைகள் எதற்கும் செவிசாய்க்காத திமுக அரசு, தனது அலட்சியத்தால் இன்று நூற்றுக்கணக்கான அரசு மாணவர் விடுதிகளை மூடியுள்ளது கடும் கண்டனத்திற்குரியது.

அரசு மாணவர் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்குவது, குடிநீர் கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளைச் செய்து தராதது, மாணவர்களை சாதிரீதியாகத் திட்டுவது, வார இறுதி நாட்களில் வலுக்கட்டாயமாக மாணவர்களை விடுதிகளில் இருந்து வெளியேற்றுவது, முடிந்தவரையில் அரசு விடுதிகளை மூடுவது என ஒடுக்கப்பட்ட மாணவர்களின் நலனை அடகுவைத்து ஆணவமாக செயல்படும் திமுகவிற்கு வரும் சட்டமன்றத் தேர்தலில் தக்க பாடம் புகட்டப்படும் என்று அவர் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Hindusthan Samachar / P YUVARAJ