Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 16 டிசம்பர் (ஹி.ச.)
சென்னையில் போக்குவரத்தில் முக்கிய பங்கு வகிக்கும் மெட்ரோ ரயில் சேவையின் இரண்டாம் கட்ட பணிகள் மாதாவரம் முதல் சிறுசேரி சிப்காட் வரையிலும், பூந்தமல்லி முதல் சென்னை கலங்கரை விளக்கம் வரையிலும், மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலும் மூன்று வழித்தடங்களில் 118.9 கிமீ தொலைவிற்கு நடைபெற்று வருகின்றன.
இதில் பூந்தமல்லி முதல் கலங்கரை விளக்கம் வரை உள்ள வழித்தடமான 26 கிலோ மீட்டர் தூரத்திற்கு மெட்ரோ ரெயில் பணிகள் நடந்து வருகிறது.இந்த பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வரும் நிலையில், பூந்தமல்லி முதல் போரூர் வரையிலான ஆளில்லா மெட்ரோ ரயில் சேவையின் 95 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளது.
பூந்தமல்லி-போரூர் மெட்ரோ 6 நிமிடங்களுக்கு ஒருமுறை இயக்க சிஎம்ஆர்எல் திட்டமிட்டுள்ளது. டெல்லி மெட்ரோ இதனை நிர்வகிக்க இருக்கிறது.
தமிழகத்துக்கு பிரதமர் மோடி வருகின்ற ஜனவரி மாதம் பயணம் மேற்கொள்ள உள்ளதாகவும், பொங்கல் விழா, தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தேர்தல் பிரசாரம் உள்ளிட்ட நிகழ்வுகளில் கலந்துகொள்ள உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின.
இந்த நிலையில், அடுத்த மாதம் நடைபெறவுள்ள பூந்தமல்லி-போரூர் மெட்ரோ தொடக்க விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொள்ளவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அவருடன் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினும் கலந்துகொள்ளவுள்ளார். இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Hindusthan Samachar / vidya.b