Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 17 டிசம்பர் (ஹி.ச)
பரந்தூர் விமான நிலையம் அமைக்க, ஏகனாபுரம் கிராமத்தில் உள்ள ஏரியை கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் வழக்கின் விசாரணை ஜனவரி 5 ம் தேதிக்கு தள்ளிவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
விமான நிலையம் அமைக்க ஏகனாபுரத்தில் உள்ள வைலேரி ஏரியை கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து, ஏகனாபுரத்தைச் சேர்ந்த ஜி.சுப்பிரமணியன் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.
விமான நிலையம் அமைக்க உள்ள நிலம் நீர்நிலை என்பதை தமிழக அரசு ஒப்புக் கொண்ட போதும் மாற்று இடத்தை தேர்வு செய்யவில்லை என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏரியை விவசாயம் சாராத பணிகளுக்காகவோ, வர்த்தக பயன்பாட்டுக்காகவோ வகைமாற்றம் செய்யக் கூடாது எனவும் மனுதாரர் தரப்பில் தெர்விக்கப்பட்டது.
இந்நிலையில் வழக்கின் விசாரணை ஜனவரி 5 ம் தேதிக்கு தள்ளிவைத்து சென்னை உயர்நீதிமன்றம் தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா, மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன் அமர்வு உத்தரவிட்டது
Hindusthan Samachar / P YUVARAJ