சபரிமலை மண்டல பூஜைக்காக ஆரன்முளா பார்த்தசாரதி கோயிலில் இருந்து டிசம்பர் 23 -ல் தங்க அங்கி பவனி புறப்பாடு
சபரிமலை, 17 டிசம்பர் (ஹி.ச.) 1973 - ல் திருவிதாங்கூர் மன்னர் சித்திரை திருநாள் மகாராஜா ஐயப்பனுக்கு 420 பவுன் எடை கொண்ட தங்க அங்கியை காணிக்கையாக வழங்கினார். இது ஆரன்முளா பார்த்தசாரதி கோயில் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டுள்ளது. இந்த அங்கி அணிவித்
சபரிமலை மண்டல பூஜைக்காக ஆரன்முளா பார்த்தசாரதி கோயிலில் இருந்து டிச.,23 -ல் தங்க அங்கி பவனி புறப்பாடு


சபரிமலை, 17 டிசம்பர் (ஹி.ச.)

1973 - ல் திருவிதாங்கூர் மன்னர் சித்திரை திருநாள் மகாராஜா ஐயப்பனுக்கு 420 பவுன் எடை கொண்ட தங்க அங்கியை காணிக்கையாக வழங்கினார்.

இது ஆரன்முளா பார்த்தசாரதி கோயில் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டுள்ளது. இந்த அங்கி அணிவித்துதான் ஐயப்பனுக்கு மண்டல பூஜை நடைபெறும்.

இதற்காக டிச.,23 -அதிகாலையில் தங்க அங்கி பவனி ஆரன்முளாவிலிருந்து புறப்படுகிறது.

நான்கு நாட்கள் பல்வேறு இடங்களில் பவனியாக வந்த பின்னர் 26 -ம் தேதி மதியம் பம்பை வந்தடையும் .

பின்னர் தலைசுமையாக சன்னிதானம் கொண்டுவரப்பட்டு கோயிலில் ஒப்படைக்கப்படும். அன்று மாலை 6:30 -க்கு தங்க அங்கி அணிவித்து தீபாராதனை நடைபெறும்.

டிச.,27 மதியம் நடைபெறும் மண்டல பூஜையிலும் ஐயப்பன் விக்ரகத்தில் இந்த அங்கி அணிவிக்கப்பட்டிருக்கும்.

தங்க அங்கி பவனிக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / JANAKI RAM