ஈரோட்டில் நாளை தவெக தலைவர் விஜய்யின் மக்கள் சந்திப்பு பொதுக்கூட்டம் - தனியார் பள்ளிக்கு நாளை விடுமுறை அறிவிப்பு
ஈரோடு, 17 டிசம்பர் (ஹி.ச) தமிழக வெற்றி கழக (தவெக) தலைவர் நடிகர் விஜய் பங்கேற்கும் மக்கள் சந்திப்பு பொதுக்கூட்டம் ஈரோடு மாவட்டத்தில் நாளை (17-12-2025) பெருந்துறை அருகே விஜயமங்கலம் சரளை பகுதியில் உள்ள மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த பிரசார கூ
ஈரோட்டில் நாளை தவெக தலைவர் விஜய்யின் மக்கள் சந்திப்பு பொதுக்கூட்டம் - தனியார் பள்ளிக்கு நாளை விடுமுறை அறிவிப்பு


ஈரோடு, 17 டிசம்பர் (ஹி.ச)

தமிழக வெற்றி கழக (தவெக) தலைவர் நடிகர் விஜய் பங்கேற்கும் மக்கள் சந்திப்பு பொதுக்கூட்டம் ஈரோடு மாவட்டத்தில் நாளை

(17-12-2025) பெருந்துறை அருகே விஜயமங்கலம் சரளை பகுதியில் உள்ள மைதானத்தில் நடைபெறவுள்ளது.

இந்த பிரசார கூட்டத்தையொட்டி 1,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். தவெக கட்சியின் பொதுச்செயலாளர் என். ஆனந்த் ஈரோடு வந்து பொதுக்கூட்ட ஏற்பாடுகளை கவனித்து வருகிறார்.

இந்த கூட்டத்தில் விஜய் பேசுவதற்கு நாளை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை போலீசாரால் நேரம் அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்த நேரத்தில் த.வெ.க. தொண்டர்கள், பொதுமக்கள் மத்தியில் விஜய் பேச இருக்கிறார்.

இந்த நிலையில், த.வெ.க. பொதுக்கூட்டம் நடைபெறும் மைதானம் அருகே உள்ள தனியார் பள்ளிக்கூடத்துக்கு மட்டும் நாளை (டிச 18) ஒருநாள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

பொதுக்கூட்டம் காரணமாக அந்த பகுதியில் வாகன நெரிசல் அதிகமாக இருக்கும் என்பதால், மாணவ-மாணவிகள் குறிப்பிட்ட நேரத்தில் வந்து செல்ல முடியாது என்பதால் அப்பள்ளிக்கு நாளை

(டிசம்பர் 17) ஒரு நாள் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பள்ளி நிர்வாகம் சார்பில் மாணவ-மாணவிகளின் பெற்றோருக்கு வாட்ஸ்-அப் தகவல் அனுப்பப்பட்டுள்ளது.

தற்போது அரையாண்டு தேர்வு நடைபெற்று வரும் நிலையில் நாளை நடைபெற இருந்த தேர்வு 26-ந் தேதி நடைபெறும் என்றும் பள்ளி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / vidya.b