Enter your Email Address to subscribe to our newsletters

தஞ்சாவூர், 17 டிசம்பர் (ஹி.ச.)
தஞ்சாவூர் மாவட்டம் பந்தநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் 15க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில் இப்பள்ளியில் உதவி தலைமை ஆசிரியர் கனகராஜ் (43). அதே பள்ளியில் கணித ஆசிரியையாக பணியாற்றி வரும் ஹேமா (36) என்பவருடன் நெருங்கி பழகி வந்துள்ளார். இருவரும் அவ்வப்போது செல்போனில் உரையாடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
இந்நிலையில் இருவரும் தனிமையில் செல்போனில் பேசிய போது எல்லை மீறி அந்தரங்க புகைப்படங்களை ஒருவருக்கொருவர் செல்போனில் பகிர்ந்து கொண்டதாக கூறப்படுகிறது. இதனை எப்படியோ தெரிந்து கொண்ட அதே பள்ளி பயிற்சி ஆசிரியர்களாக உள்ள பி.எட் மாணவர்கள் இனியவர்மன் (22), கலைசாரதி (22) ஆகிய இருவரும் சேர்ந்து உதவி தலைமை ஆசிரியர் கனகராஜின் செல்போனை திருடியுள்ளனர்.
அதுமட்டுமல்லாமல் செல்போனில் உள்ள ஆபாச புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிடப்போவதாக மிரட்டியுள்ளனர். இதுபோன்று செய்யக்கூடாது என்றால் ரூ.5 லட்சம் கேட்டு அவரை மிரட்டியுள்ளனர். இந்நிலையில் இருவரும் தனது செல்போனை திருடிவிட்டதாக பந்தநல்லூர் காவல் நிலையத்தில் உதவி தலைமை ஆசிரியர் கனகராஜ் கடந்த மாதம் 27ம் தேதி புகார் அளித்துள்ளார்.
இந்த புகாரை அடுத்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். பின்னர் பயிற்சி ஆசிரியர்கள் கலைசாரதி, இனியவர்மன் ஆகிய இருவரையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்து செல்போனை பறிமுதல் செய்தது அதிலுள்ள அந்தரங்க புகைப்படங்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே இந்த சம்பவம் தொடர்பாக ஆசிரியர்கள் இருவரிடம் தனித்தனியாக விசாரணை மேற்கொண்டதில் அந்தரங்க புகைப்படங்கள் அவர்களது செல்போனில் பகிர்ந்தது தெரிய வந்தது.
இதனையடுத்து, உதவி தலைமை ஆசிரியர் கனகராஜ், கணித ஆசிரியை ஹேமா ஆகியோரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார்.
Hindusthan Samachar / ANANDHAN