பராமரிப்பு பணிகள் காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தின் ஒரு சில பகுதிகளில் நாளை மின்தடை அறிவிப்பு
தூத்துக்குடி , 17 டிசம்பர் (ஹி.ச.) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தின் ஒரு சில பகுதிகளில் நாளை (டிசம்பர் 18) மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக மின்பகிர்மானக் கழகம் வெளியிட்டுள்ள அறி
பராமரிப்புப் பணிகள் காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தின் ஒரு சில பகுதிகளில் நாளை மின்தடை அறிவிப்பு


தூத்துக்குடி , 17 டிசம்பர் (ஹி.ச.)

மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தின் ஒரு சில பகுதிகளில் நாளை (டிசம்பர் 18) மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழக மின்பகிர்மானக் கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது,

தூத்துக்குடி நகர் கோட்டம் அரசடி மற்றும் அய்யனார்புரம் துணைமின் நிலையங்களில் நாளை (டிசம்பர் 18) வியாழக்கிழமை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளது.

அரசடி துணைமின் நிலையம்: தருவைகுளம் உப்பளபகுதிகள் சில்லாநத்தம், சாமிநத்தம் புதூர்பாண்டியபுரம், மேலஅரசடி, கீழஅரசடி, தருவைகுளம், பட்டிணமருதூர், பட்டிணமருதூர் உப்பளபகுதிகள், வேலாயுதபுரம், வாலசமுத்திரம், கிழக்கு கடற்கரை சாலை, எட்டையாபுரம் ரோடு வடபுறம் பகுதிகள்.

அய்யனார்புரம் துனைமின்நிலையம்: மாப்பிள்ளையூரணி, ஜோதிநகர், திரேஷ்நகர், ஹைசிங்போர்டு, குமரன்நகர் காமராஜ்நகர், டேவிஸ்புரம் சாகிர்உசேன் நகர், சுனாமிநகர் நேருகாலனி கிழக்கு, ஜீவாநகர், லூர்தம்மாள் புரம், தாளமுத்துநகர், கோயில் பிள்ளைவிளை, ஆரோக்கியபுரம் T.சவேரியார் புரம், மாதாநகர், ராஜாபாளையம் சிலுவைபட்டி, கிருஷ்ணராஜாபுரம், முத்துகிருஷ்ணாபுரம், மேலஅரசடி, கீழஅரசடி, வெள்ளப்பட்டி, தருவைகுளம் பணையூர், தளவாய்புரம்,

கோமஸ்புரம், பட்டிணமருதூர், உப்பள பகுதிகள், பனையூர், ஆனந்தமாடன்பச்சேரி, வாழ்சமுத்திரம், மேலமருதூர், அ.குமாரபுரம், மேலமருதூர் திரேஸ்புரம், மேலஅலங்காரதட்டு, கீழஅலங்காரதட்டு, மாணிக்கப்புரம், பூபாலராயர்புரம், குருஸ்புரம், சங்குகுளிகாலனி, மேட்டுப்பட்டி, முத்தையார் காலனி, வெற்றிவேல்புரம், ராமர்விளை, மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 09.00 மணி முதல் மாலை 04.00 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படும்.

இவ்வாறு அதில் அறிவிக்கப்படடுள்ளது.

Hindusthan Samachar / vidya.b