3 நாட்களில் 2000 அதிமுக விருப்ப மனுக்கள் விநியோகம்
சென்னை, 18 டிசம்பர் (ஹி.ச.) கடந்த மூன்று நாட்களில் 2 ஆயிரம் அதிமுக மனுக்கள் பெறப்பட்டு 3 கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக தகவல் தொழில் நுட்ப பிரிவு சார்பாக தமிழகத்தில் உள்ள அனைத்து பொது தொகுதிகளிலும் அதிமுக பொதுச
அதிமுக


சென்னை, 18 டிசம்பர் (ஹி.ச.)

கடந்த மூன்று நாட்களில் 2 ஆயிரம் அதிமுக மனுக்கள் பெறப்பட்டு 3 கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிமுக தகவல் தொழில் நுட்ப பிரிவு சார்பாக தமிழகத்தில் உள்ள அனைத்து பொது தொகுதிகளிலும் அதிமுக பொதுச் செயலாளர் போட்டியிட விருப்பம் தெரிவித்து விருப்ப மனு அளித்தனர்.

தமிழகம், புதுச்​சேரி, கேரளா ஆகிய சட்​டப்​பேரவைகளுக்கு பொதுத்​தேர்​தல் நெருங்கி வருகிறது. இதற்காக அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளை தொடங்கிவிட்டன. இதன்படி அதிமுக சார்​பில் போட்​டி​யிட விரும்​பும் நபர்​கள், விருப்பமனு வழங்க ஏது​வாக விருப்பமனு விநியோகம் கடந்த 15 தேதி தொடக்கியது. சென்னையில் கட்​சித் தலைமை அலு​வல​கத்​தில் நடை​பெற்​று வருகிறது. தமிழகத்​தின் பல்​வேறு மாவட்​டங்​களைச் சேர்ந்த நிர்​வாகி​கள் மற்​றும் தொண்​டர்​கள் ஏராள​மானோர் அதி​முக தலைமை அலு​வல​கத்​தில் திரண்டு மனுக்​களை பெற்​று வருகின்றனர்.

தமிழகத்​தில் பொது மற்றும் தனி தொகு​தி​கள் அனைத்​துக்​கும் ரூ.15 ஆயிரம் செலுத்தி மனுக்​களை பெற்​றனர். புதுச்​சேரி​யில் போட்​டி​யிடு​வதற்கான விருப்ப மனுக்களை ரூ.5 ஆயிரம் செலுத்தி பெற்​றனர். ஒவ்​வொரு நாளும் காலை 10 முதல் மாலை 5 மணி வரை விருப்பமனுக்​கள் விநி​யோகம் நடை​பெறுகிறது. வாங்கிய விண்​ணப்​பங்​களை​கார், படி, சுவறு உள்ளிட்ட இடங்களில் ஆங்காங்கே பூர்த்தி செய்து வழங்கி வருகின்றனர். மேலும் அங்கேயே புகைப்படம் எடுத்து வருகின்றனர்.

விருப்பமனு விநி​யோகம் டிச.23-ம் தேதி வரை நடை​பெற உள்ளது.

முதல் நாளில் ஒரே நாளில் 1,237 விருப்ப மனுக்​கள் பெறப்​பட்​டன, செவ்வாய் கிழமை குறைவாக வாங்கினார்கள், நேற்று மட்டும் 690 மனுக்கள் பெறப்பட்டது. நேற்று வரை 2 ஆயிரம் மனுக்கள் பெறப்பட்டு 3 கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டது. இன்று, நாளையும் நல்ல நாள் என்பதால் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் வாங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதிமுக தகவல் தொழில் நுட்ப பிரிவு மாநில செயலாளர் ராஜ் சத்யன் தலைமையிலான தகவல் தொழில் நுட்ப பிரிவினர், தமிழகத்தில் உள்ள அனைத்து பொது தொகுதிகளிலும் அதிமுக பொதுச் செயலாளர் போட்டியிட விருப்பம் தெரிவித்து விருப்ப மனு அளித்தனர்.

அவர்களது விருப்ப மனுக்களை அமைப்புச் செயலாளர்கள் தளவாய் சுந்தரம், ஓ.எஸ். மணியன் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.

Hindusthan Samachar / GOKILA arumugam