Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 18 டிசம்பர் (ஹி.ச)
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் செயற்குழு - பொதுக்குழுக் கூட்டமானது வருகிற ஜனவரி 5ஆம் தேதி தஞ்சாவூரில் நடைபெறுகிறது.
இந் நிலையில் இது குறித்து கட்சியின் பொது செயலாளர் டிடிவி தினகரன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது,
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டம், கழகத் தலைவர் C.கோபால் (முன்னாள் சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்) தலைமையில் வருகின்ற 05.01.2026 திங்கட்கிழமையன்று காலை 9.00 மணியளவில் தஞ்சாவூர், மஹாராஜா மஹாலில் நடைபெற உள்ளது.
அனைத்து கழக செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்களும் தங்களுக்கான அழைப்பிதழோடு தவறாமல் கலந்துகொள்ள வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன் என்று அவர் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
Hindusthan Samachar / P YUVARAJ