Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 19 டிசம்பர் (ஹி.ச)
அரசியல் கட்சிகளின் கூட்டங்கள் மற்றும் ரோட் ஷோ-க்களுக்கு நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்க கோரிய வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படுகிறது.
சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு நாளை காலை 10.30 மணிக்கு தீர்ப்பு அளிக்கிறது.
கரூர் துயர் சம்பவத்தை தொடர்ந்து அரசியல் கட்சிகள் ரோட் சோக்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்க உத்தரவிடக்கோரி அதிமுக, தவெக உள்ளிட்ட கட்சிகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்ய பட்டிருந்தது.
அரசியல் கட்சிகள் ரோட் ஷோ நடத்துவதற்கு வரைவு வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு தாக்கல் செய்திருந்தது.
Hindusthan Samachar / P YUVARAJ