Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 19 டிசம்பர் (ஹி.ச.)
லஞ்ச ஒழிப்புத் துறை பதிவு செய்த 41 வழக்குகளின் விசாரணையை சிபிஐ-க்கு மாற்றக் கோரி, காஞ்சிபுரத்தைச் சேர்ந்த டில்லிபாபு என்பவர் வழக்கு தொடர்ந்து இருந்தார்.
இந்நிலையில் தமிழக அரசு அமலாக்கத் துறை விசார்ணைக்கு உச்சநீதிமன்றத்தில் தடை பெற்றுள்ளதால், வழக்கை மாநில லஞ்ச ஒழிப்புத் துறை நியாயமாக விசாரிக்காது என மனுதாரர் தரப்பில் தெர்விக்கப்பட்டது.
டாஸ்மாக் முறைகேடு வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்களை இந்த வழக்கில் எதிர் மனுதாரராக இன்னும் சேர்க்கவில்லை எனவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இந் நிலையில் இந்த வழக்கு ஜனவரி 22 ம் தேதிக்கு தள்ளிவைத்து தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா, மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன் அமர்வு உத்தரவிட்டது.
Hindusthan Samachar / P YUVARAJ