Enter your Email Address to subscribe to our newsletters

நீலகிரி, 20 டிசம்பர் (ஹி.ச.)
கிருஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை வரவேற்கும் விதமாக உதகையில் சாக்லெட் திருவிழா
தொடங்கியது.
ஒரு கிலோ 60 ரூபாய் முதல் 10 ஆயிரம் வரையிலான 160 வகையான
சாக்லெட்கள் காட்சிக்கு வைக்கபட்டுள்ளது.
ஹோம் மேட் சாக்லெட் என்றால் அனைவரின் நினைவிற்கு வருவது உதகை தான்.
அதற்கான
இதமான காலநிலையும் இங்கு நிலவுவதால் தமிழகம் மற்றும் கேரளா மாநிலங்களில்
சாகுபடி செய்யப்படும் கோகோ பழங்களில் இருந்து சேகரிக்கப்படும் கோகோ விதைகள்
வரவழைக்கபட்டு அரைத்து அவற்றுடன் கோகோ பட்டர் மற்றும் கரும்பு சர்க்கரை
சேர்த்து ஹோம் மேட் சாக்லெட் தயாரிக்கபடுகிறது.
இந்த சாக்லெட்டுகளை சுற்றுலா
பயணிகள் மட்டுமின்றி உள்ளூர் மக்களும் அதிகம் விரும்பி வாங்கி செல்கின்றனர்.
இந்த நிலையில் உதகையில் சாக்லெட் எம் அண்ட் என் தயாரிப்பு நிறுவனம் சார்பில்
ஒவ்வொரு ஆண்டும் சாக்லெட் திருவிழா நடத்தபடுகிறது.
இந்த ஆண்டு கிருஸ்துமஸ்
மற்றும் புத்தாண்டை வரவேற்க்கும் விதமாக15 நாள் சாக்லெட் திருவிழா தொடங்கியது.
இதில் டார்க், மில்க், ஒய்ட் என மூன்று ரகங்களில் பாதாம், பிஸ்தா, முந்திரி,
திராட்சை உள்ளிட்ட பொருட்களை கொண்டு 150 வகையான ஹோம் மேட் சாக்லெட்கள்
காட்சிபடுத்தபட்டுள்ளது.
குறிப்பாக இந்த ஆண்டின் சிறப்பு அம்சமாக சுற்றுலா பயணிகளை கவரும் விதத்தில்
தேன்,தேயிலை,மிளகு,காளான் உள்ளிட்ட நீலகிரியில் கிடைக்ககூடிய பொருட்களை கொண்டு
இனிப்பு,புளிப்பு, உவர்பு,கசப்பு,கார்ப்பு,துவர்ப்பு ஆகிய அறுசுவைகளில்
தயாரிக்கபட்ட சாக்லெட் வகைகள் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது.
மேலும் 210 கிலோ சாக்லெட்டை கொண்டு நீலகிரி மலை போன்ற வடிவம்
அமைக்கபட்டிருந்தது.
ரூ.60 முதல் 10 ஆயிரம் வரை விற்பனைக்கு வைக்கபட்டுள்ள பல
வகையான சாக்லெட்களை சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர்.
Hindusthan Samachar / GOKILA arumugam