உளுந்தூர்பேட்டை அருகே தண்டவாளத்தை கடக்க முயன்ற பெண் ரயில் மோதி உயிரிழப்பு
கள்ளக்குறிச்சி, 21 டிசம்பர் (ஹி.ச.) கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள பு.மாம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் சத்யா. 38 வயதான இவர் மாடுகளை மேய்ப்பதற்காக இன்று காலை ஓட்டிச் சென்றார். இந்த நிலையில் அந்த கிராமத்தில் உள்ள ரயில்வே தண்ட
Death


கள்ளக்குறிச்சி, 21 டிசம்பர் (ஹி.ச.)

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள பு.மாம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் சத்யா. 38 வயதான இவர் மாடுகளை மேய்ப்பதற்காக இன்று காலை ஓட்டிச் சென்றார்.

இந்த நிலையில் அந்த கிராமத்தில் உள்ள ரயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்ற பொழுது, அந்த வழியே சென்ற ரயில், சத்யா மீது மோதி உள்ளது.

இதில் உடல் துண்டு துண்டான நிலையில் உயிரிழந்த சத்யாவின் உடலைப் பார்த்து பின்னால் மாடுகளை அழைத்து வந்த பொதுமக்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். மேலும் இதுகுறித்து உடனடியாக விருத்தாசலம் ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன் பிறகு அங்கு விரைந்து வந்த ரயில்வே போலீசார் உயிரிழந்த சத்யாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்த புகாரின் பேரில் விருத்தாசலம் ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Hindusthan Samachar / ANANDHAN