Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 22 டிசம்பர் (ஹி.ச)
தமிழ்நாடு சைக்கிள் ஓதல் சங்கத்துடன் இணைந்து எலிஃபண்டைன் சர்க்யூட் நடத்திய சைக்ளோத்தான் நிகழ்வு சென்னை அடையாறு பகுதியில் நடைபெற்றது.
இந் நிகழ்வை முன்னாள் தமிழக டிஜிபி டாக்டர் சைலேந்திர பாபு மற்றும் எலிஃபண்டைன் நிர்வாக இயக்குநர் ரமணன் பாலகங்காதரன் ஆகியோர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
இதில், கலா அறக்கட்டளையைச் சேர்ந்த 35 மதியிறுக்க (ஆட்டிசம்) நிலையினர் பங்கேற்றுள்ளனர், மேலும் அவர்களில் ஒருவரான 8 மாத கர்ப்பிணிப் பெண் தனது கணவருடன் டேன்டெம் பைக்கில் பங்கேற்றார்.என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் நகரம் முழுவதும் சுமார் 400 மேற்பட்ட
சைக்கிள் ஓட்டுநர்கள் பங்கேற்று நிகழ்வை வெற்றிகரமாக முடித்தனர்.
இதனைத் தொடர்ந்து பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேசிய சைலேந்திர பாபு,
மாரத்தான் சென்னையில் பரவலாக நடந்து வருகிறது.
ஆனால் இப்போது முதல்முறையாக சைக்ளோத்தான் நடைபெறுகிறது.
500 -க்கும் மேற்பட்டவர்கள் சைக்கிள் ஒட்டுகிறார்கள். பெரிய மகிழ்ச்சி. மக்களின் அடிப்படை தேவை மனமகிழ்ச்சி தான் அது சைக்கிளிங்கில் கிடைக்கும். இதில் கலந்துகொள்ளும் போது பல இடங்களை பார்த்த திருப்தி கிடைக்கும்.
50, 100 கிலோ மீட்டர் சைக்கிளிங் ஓட்டுபவர்கள் தினமும் எத்தனையோ பேரைச் சந்திப்பார்கள். அது மனதுக்கு மகிழ்ச்சி தரும். உற்சாகம் தரும். மேலும் இதன் மூலம் சாதனைகள் இந்திய அளவிலும் உலக அளவிலும் நிகழும் அதற்காக இந்த சைக்களத்தான் நிகழ்வை நாம் கண்டிப்பாக ஆதரிக்க வேண்டும். பைக் ஒரு தானியங்கி இயந்திரம் அதை ஓட்ட உடல் உழைப்பு தேவை இல்லை. சைக்கிள் ஓட்ட உடல் பலம் தேவை, இளைஞர்கள் பைக் மோகத்தை விட்டு விட்டு சைக்ளோத்தானை தேர்ந்தெடுக்க வேண்டும். உண்மையான உடல் தகுதி யோடு இருக்கக்கூடிய விளையாட்டு சைக்கிள் பந்தயம் தான். உலக நாடுகளில் பாரிஸில் 1800 கிலோமீட்டர் சைக்கிள் பந்தயம் ஆனது இருக்கிறது. லண்டனில் கிட்டத்தட்ட 1000 கிலோ மீட்டருக்கு மேல சைக்கிள் ஓட்டக்கூடிய பந்தயங்கள் இருக்கிறது.
அங்கு உள்ளவர்கள் அதற்கே தயாராக இருக்கிறார்கள் நமது ஊரில் நாம் இமய மலைக்கு காரில் செல்வதே பெரிய விஷயமாக பார்க்கிறோம். மூன்று நாள் நான்கு நாட்கள் என தொடர்ச்சியாக அவர்கள் சைக்கிள் ஓட்டுவது அவர்களது மன உறுதியை காட்டுகிறது. அந்த வகையில் மோட்டார் சைக்கிளை ஓட்டுவதை விட சைக்கிளை ஓட்டுவதே நல்லது.
மோட்டார் சைக்கிளில் ரேஸ் என்கின்ற பெயரில் வருகிறார்கள் அவர்களுக்கு சாலை விதி சுத்தமாக தெரிவதில்லை. கடந்த காலகட்டத்தில் கோயமுத்தூரில் நான் காவல்துறையில் இருந்த பொழுது, ஒரே நாளில் 30 பேரை பிடித்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்தேன் அதை பார்த்து பலரும் இவர் சைலேந்திரபாபு இல்லை சைலண்டர் பாபு என எனக்கு பட்டமே கொடுத்தார்கள்.
இப்போது காற்று மாசுபாடு மிகப்பெரிய அளவில் இருக்கிறது. அது மிகப்பெரிய பிரச்சனையாக மாறி வருகிறது. மக்கள் குறைந்த தூரங்களுக்கு பயணிக்கையில் கார் பைக் வாகனங்களைத் தவிர்த்து, சைக்கிளை பயன்படுத்த வேண்டும். இது சுற்றுச்சூழலுக்கும், நம் மனதுக்கும் உடலுக்கும் நல்ல பயன் தரும். ஒவ்வொரு குடும்பத்திலும் இருக்கக்கூடிய அப்பா அம்மா குழந்தைகள் சைக்கிளை எடுத்துக்கொண்டு பயணம் செய்யுங்கள் ஆரம்பத்தில் அது வெறும் ஐந்து கிலோமீட்டரில் ஆரம்பித்து படிப்படியாக உயர்ந்து உயர்த்திக் கொள்ளலாம்.
இந்த நிகழ்வில் சிறப்பு குழந்தைகள் பங்கே இருக்கிறார்கள். அது வரவேற்கத்தக்கது. மனம் சம்பந்தப்பட்ட பல்வேறு பிரச்சனைகளுக்கு சைக்கிள் ஓட்டுவது நல்ல மருந்தாக இருக்கிறது. புத்துணர்ச்சியை அதிகளவு கொடுக்கக்கூடியது சைக்கிளை ஓட்டுவது.
இந்த சைக்களத்தான் நிகழ்வை நடத்தும் தமிழ்நாடு சைக்கிள் ஓட்டுதல் சங்கம் மற்றும்
எலிஃபண்டைன் சர்க்யூட் ஆகியோருக்கு, எனது மனமார்ந்த பாராட்டுக்கள். இது தொடர்ந்து நடைபெற வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் நன்றி. என்றார்.
Hindusthan Samachar / vidya.b