Enter your Email Address to subscribe to our newsletters

கோவை, 23 டிசம்பர் (ஹி.ச.)
கோவை மாவட்டத்தில் உள்ள ஒரு தாலுகா காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவருக்கு சொந்தமான வீடு, மதுக்கரை பிருந்தாவன் நகரில் உள்ளது. அங்கு அவரது மகள் மற்றும் உறவினர் மகள் ஆகிய இருவரும் தங்கி அருகில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு இரவு போலீஸ் வாகனத்தில் இன்ஸ்பெக்டர் வீட்டிற்கு வந்துள்ளார். தனது வாகனத்தை ஓட்டி வந்த போலீஸ்காரர் மாதவ கண்ணனுக்கு தனி அறையை கொடுத்து இன்ஸ்பெக்டர் தங்க வைத்துள்ளார்.
அங்கு தங்கிய அந்த போலீஸ்காரர் இன்ஸ்பெக்டரின் உறவுக்கார பெண் குளியல் அறைக்கு சென்று குளித்துக்கொண்டிருந்தார். அப்போது இதை ரகசியமாக மறைந்திருந்து போலீஸ்காரர் வளைச்சு வளைச்சு வீடியோ எடுத்து ரசித்து கொண்டிருந்தார். அவர் வீடியோ எடுத்ததை எதார்த்தமாக வெளியே வந்த இன்ஸ்பெக்டர் பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
இதனையடுத்து போலீஸ்காரர் வைத்திருந்த செல்போனை பறித்துள்ளார். பின்னர் இதுகுறித்து மதுக்கரை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரை அடுத்து போலீஸ்காரர் மாதவ கண்ணனை கைது செய்த மதுக்கரை போலீசார், அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Hindusthan Samachar / ANANDHAN